India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முகநூல், வாட்ஸ்அப் , போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிமுகமில்லாத நண்பர்களுக்கு புதிய நண்பர்கள் அழைப்பு விடுப்பது அல்லது அழைப்பு ஏற்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், தேவையின்றி தங்களது தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினம் அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நவ.23 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடக்க உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் 2023 – 2024 கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெற்று 58 மாணவ மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்பும், 17 மாணவர்கள் பல் மருத்துவமும், 33 பேர் பல்வேறு கல்லூரியில் சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவமும், 14 மாணவர்கள் கால்நடை மருத்துவம் மற்றும் 184 மாணவர்கள் அக்ரி படிப்பும் சேர்ந்துள்ளதாக தருமபுரி முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் (நவ 20) உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினமான 1/11/ 2024 அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் 23 /11 /2024 அன்று காலை 11 மணி அளவில் நடத்தப்பட்டுள்ளது அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள் என்ன தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டார்
தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்விற்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நேர்முகத் தேர்வானது நவ 25ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5 ஆம் தேதிகளில் நடைபெறும். இது கமலம் இன்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்இ, பாலக்கோடு சாலை, கே.நடுஅள்ளி பகுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மகப்பேறு மருத்துவமனைகளில் ஒரு மகப்பேறு பணி மருத்துவர் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு, தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டால், மருத்துவமனைகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவம்பர் 23/11/2024 மற்றும் 24/11/2024 இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
உலக கழிப்பறை தினம் விழிப்புணர்வு வாரமாக நேற்று முதல் டிச 20 மனித உரிமைகள் தினம் வரை அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஊராட்சி அளவில் செயல்பாட்டில் இல்லாத சமுதாயம் சுகாதார வளாகங்களை கண்டறிந்து IMISவலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் கழிவறை இல்லாத பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Low Risk இருந்து High Risk க்கு மாறும் தாய்மார்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவரை ஊர்தியின் மூலம் அனுப்பப்பட வேண்டும். மேலும், அவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் PICME PORTAL-ENTRY போட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் ஆவின் பாலக முகவர்களாக நியமனம் பெற விருப்பம் உள்ள முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆவின் பாலாக முகவர் நியாயமானது ஆவின் நிறுவன www.aavinmilk.com என்ற நிறுவன இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனைபிரிவு நந்தனம் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.