Dharmapuri

News November 23, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் 2001-2010 காலகட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த 18 வயது முடிந்தவருக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளிகள் அந்தந்த வட்டார அலுவலகங்கள் மூலம் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகி முதிர்வு தொகையை பெறலாம். அணுக வேண்டிய முகவரி சமூக நலஅலுவலகம், கூடுதல் கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், தர்மபுரி மாவட்டம். மேலும் 04342-233088 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News November 23, 2024

தருமபுரி மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது ஆட்சியர் அறிவிப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்வரால் தேர்வு செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். 

News November 22, 2024

வாக்கு சாவடி மைய அலுவலர்கள் நியமனம்

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்களிடமிருந்து படிவங்களை பெற்றிட வாக்குசாவடி மைய அலுவலர்கள் DLO நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாட்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% சதவீத வட்டியில் ரூபாய் 20 லட்சம் வரை உற்பத்தி நடைமுறை மூலதன கடன்கள், இயந்திரங்கள் அசையா சொத்து அடமானத்தில் கடன் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். 

News November 22, 2024

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்எல்ஏ

image

அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதி திட்டங்கள் குறித்த மனுக்கள் ஆகியவற்றை இன்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தியிடம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் வழங்கினார். 

News November 22, 2024

நிலக்கடலை விதைப்பண்ணை அமைக்க அழைப்பு

image

தருமபுரி மாவட்ட விதை சான்றளிப்பு & உயிர்மச்சான்று உதவி இயக்குனர் மதியழகன் இன்று(நவ 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலக்கடலை கார்த்திகை பட்டமாக நவம்பர் & டிசம்பர் மாதங்களில் விதைப்பு செய்வது வழக்கம். எனவே,விதைப்பு செய்தவர்கள் விதைப்பண்ணையில் பதிவு செய்யலாம் என்றும், விவசாயிகளை ஊக்குவிக்க தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் ஒரு கிலோ விதைக்கு 25 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

ஒகேனக்கலில் வன உயிரின பாதுகாப்பு மையம்- அதிகாரிகள் தகவல்

image

ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வனப்பகுதிகளின் இயற்கை சமநிலை, வனவிலங்கு பாதுகாப்பு, முக்கியத்துவம் குறித்து இங்கு வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒகேனக்கலில் 5 கோடி மதிப்பிலான வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

News November 22, 2024

தருமபுரி தொண்டு நிறுவனங்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், முன்னணி தொழிற்சாலைகள், வங்கி மற்றும் கல்வி நிறுவனங்கள் தாமாக முன் வந்து ஏரி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விருப்பமுடைய தன்னார்வலர்கள் 7373704569 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

பெட்டிக்கடைகளுக்கு ரூ.25,000 அபராதம்  

image

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி, கோபிநாதம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டையில், நேற்று நவம்பர்.21, ஒரு பெட்டிக்கடை மற்றும் வடகரையில் ஒரு பெட்டிகடை என 2 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு, அபராதமாக தலா 25,000 மற்றும் 15 நாட்கள் கடை இயங்க தடை விதித்து மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா உத்தரவிட்டார்.

error: Content is protected !!