India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 11.12.2024 அன்று நடைபெற உள்ளது. பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, கும்மனூர் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு நாளையுடன்(டிச 10) முடிவடைகிறது. எனவே மின் கட்டணம் செலுத்துவோர் அபராதம் இல்லாமல் மின் கட்டணத்தை செலுத்தமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் நாளை முதல் தேசிய தொழில் பழகுனர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் பெறலாம், மாதத்திற்கு 8,500 முதல் 18,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது 94422 86874,8778447162,7548844547, என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தமிழக அரசு நடத்தும் திருக்குறள் போட்டிகளுக்கு தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருக்குறள் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளை 18 ஆம் தேதிக்குள் tndiprmhkural@gmail.com என்ற இணையதளக் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக, இலக்கியம்பட்டி, ராமியனஅள்ளி, பாரதிபுரம் உங்கரானஅள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரையும் அரூர், எட்டிப்பட்டி, அழகிரிநகர், பெத்தூர், சந்தைப்பட்டி, அச்சல்வாடி, ஓடசல்பட்டி, சின்னகுப்பம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவம் உதவியாளர் பணிகளுக்கு நாளை(டிச 7) காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த நேர்முகத் தேர்விற்கு கலந்து கொள்பவர்கள் அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 89 259 40856 89259 40858 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்கு கைப்பற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 91 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 95 வாகனங்கள் டிச 18ஆம் தேதி காலை 8 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து விருப்பமுடியவர்கள் பத்தாயிரம் முன் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம் என தர்மபுரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக நீதி, சமத்துவத்தை காத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அவரின் நினைவை போற்றி புகழ்வோம் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், ஜோதிமஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கலந்துகொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.