India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு https://aavot.com என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இங்கு <

தர்மபுரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.

தர்மபுரி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட தர்மபுரி மக்களே இதனை SHARE பண்ணுங்க

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக நேற்று முழுவதும் ஆங்காங்கே சாரல் மழை மற்றும் கனமழை பெய்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. அதன்படி அதிகபட்சமாக அரூர் 18.2 மிமீ, பென்னாகரம் 12 மிமீ, ஒகேனக்கல் வனப்பகுதியில் 5 மிமீ, பாலக்கோடு 3 மிமீ, மாரண்டஅள்ளி 2 மிமீ என மழை பதிவாகியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் தருமபுரி மாவட்டப் பிரச்சார நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (செப். 28) அவர் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில், அவரது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகிவுள்ளது. இதனால் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவம் காரணமாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் தருமபுரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (செப். 28) தருமபுரி, (செப். 29) பாலக்கோடு, (செப். 30) பென்னாகரம் தொகுதிகளில் நடைபெற இருந்த அவரது ‘எழுச்சிப் பயணம்’, அவர் கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்ததால் ரத்து செய்யப்பட்டது

தர்மபுரி மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வருவோர், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெற்றிப் பெற வாழ்த்துகள்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Sorry, no posts matched your criteria.