India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரூர்-தர்மபுரி சாலை வனப்பகுதியையொட்டி உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, நேற்று அரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இந்தியன் வங்கி, ஊருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கும் இருசக்கர வாகன பழுது பார்த்தல் இலவச பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பின்புறம் உள்ள கட்டுமான சங்க அலுவலகம் அருகில் உள்ள ஆர்எஸ்இடி அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜவைரி.03 ஆம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.
தருமபுரி மாவட்ட நூலகத்தில் ஐயன் திருவள்ளுவரின் 133அடி உயர திருவுருவச் சிலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் நடைபெற்றது. இதில் மூக்கனூர் அரசு பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி மீனாட்சி முதலிடமும், ஜீவா நகர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு ஹாசினி இரண்டாம் இடமும், வேலனூர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர் யோகேஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டுறங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், காரிமங்கலம் வட்டம் குண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சத்யா பிரதாப் என்பவர் இணையவழியாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி குடும்ப அட்டையை வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 30 மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு குறைகள் தொடர்பாக 405 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மொபைல் ஏடிஎம் வசதி துவக்க விழா இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி எம்.பி மணி ஆகியோர் ஏடிஎம் வசதியை துவக்கி வைத்தனர். மேலும், இந்நிகழ்வில் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 48 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை துறை திட்டங்களாக வரப்பு பயிராக பயிறுவகை விதைகள் 1920 எக்டருக்கு விநியோகம்,என மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 3 அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட 03 வாகனங்களை ஜன 2 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பபவுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்து தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.