Dharmapuri

News October 3, 2025

60 ஆண்டுகளில் முன்னேறியதா தர்மபுரி ?

image

தர்மபுரி நேற்றுடன் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், 60 ஆண்டுகளில் தர்மபுரி வளர்ச்சி அடைந்துள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது. இன்றும் தர்மபுரி மக்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை தான் உள்ளது. இங்கிருந்து பிரிந்து சென்ற ஓசூர் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் கூறதக்க தொழில் வளர்ச்சி இல்லை என்பதே மக்களின் கருத்து. உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 3, 2025

தர்மபுரி உதய நாள் கொண்டாட்டம்

image

தருமபுரி மாவட்டம் உதயமாகி 60ஆம் ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு, தருமபுரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்படம் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் பொது மக்களுடன் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.இந்த கொண்டாட்டத்தில் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

News October 3, 2025

தர்மபுரியில் பிரேமலதா சுற்றுப்பயணம்

image

தருமபுரிக்கு தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா வரும் 6ஆம் தேதி தர்மபுரியில் “உள்ளம் தேடி இல்லம் நாடி” சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். பிடமனேரி 6 மணிக்கும், நல்லம்பள்ளி 7 மணிக்கும், பாளையம் புதூர் 8 மணிக்கும் வருகை தர உள்ளார். தற்போது இதற்கான ஏற்பாடுகளை தேமுதிகவினர் செய்து வருகின்றனர்.

News October 3, 2025

தர்மபுரி: ரூ.1000 இல்லை 1500ஆக வழங்கப்படும்- இபிஎஸ்

image

தர்மபுரி மாவட்டம், அரூரில் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை நிகழ்த்தினார். அதிமுகவின் தொடர் அழுத்தம் காரணமாகவே 28 மாதங்கள் கழித்து திமுக ரூ.1000 உரிமைத்தொகை தந்தது.இப்போது 30 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளனர். பெண்களின் கஷ்டங்களை பார்த்துக் கொடுக்கவில்லை. தேர்தல் வருவதால், ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 1500ஆக வழங்கப்படும் என்றார்.

News October 3, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.02) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. ராமமூர்த்தி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News October 2, 2025

தருமபுரியில் மாபெரும் சைக்கிள் பேரணி அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட கிராம விழிகள் அறக்கட்டளை சார்பில், இம்மாதம் 5-ஆம் தேதி போதை இல்லாத தருமபுரி என்ற தலைப்பில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இது முத்து கவுண்டன் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி, கொளகத்துர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைகிறது. இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரப்படுகிறார்கள்.

News October 2, 2025

தருமபுரி பாஜக மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

image

தருமபுரி மாவட்ட பாஜக மகளிர் அணிக்கு இன்று (அக்டோபர் 2) புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவர் திரு.சி. சரவணன் (B.A., DIAM) ஒப்புதல் மற்றும் மகளிர் அணி மாவட்டத் தலைவர் திருமதி பி. கலையரசி (B.A.) அறிவிப்பின்படி இந்த நியமனங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய நிர்வாகிகளால் மகளிர் அணியின் செயல்பாடுகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 2, 2025

தருமபுரி: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News October 2, 2025

தர்மபுரி: பிரசாரத்திற்கு குழந்தைகள் வர வேண்டாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் அக்டோபர் 2,3 ஆகிய இரண்டு நாட்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வயதான முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் துயரத்தின் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News October 2, 2025

தர்மபுரி BIRTHDAY SPL! காமராஜர் தந்த வாக்குறுதி

image

தர்மபுரி இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. 1965ல் தர்மபுரி இடைத்தேர்தலின் போது காங்கிரஸுக்கு பரப்புரை செய்த காமராசர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.அதன்படி 1965 அக்.2ல் முதல்வர் பக்தவச்சலம் தர்மபுரியை தனி மாவட்டமாக அறிவித்தார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!