Dharmapuri

News September 17, 2025

தருமபுரி : இன்று இரவு ரோந்து அலுவல் விவரங்கள்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (16.09.2025) இரவு ரோந்து அலுவல் விவரங்கள் வெளியிடப்பட்டன. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக பாலக்கோடு சப்-டிவிஷன் காவல் துணை கண்காணிப்பாளர்கே.மு. மனோஹரன் நியமிக்கப்பட்டுள்ளார். தாலுக்காவாரியாக பொறுப்பேற்கும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் அவர்களின் மொபைல் எண்கள் பொதுமக்கள் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரநிலையில் மக்கள் நேரடியாக தொடர்புகொள்ளலாம்

News September 16, 2025

நலத்திட்டங்களை வழங்கிய கலெக்டர்

image

தருமபுரி நகராட்சி, பிபிசி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் வழங்கினார். உடன் அரசுத் துறை அலுவலர்கள் இருந்தனர்.

News September 16, 2025

தர்மபுரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்தில்
தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ், தர்மபுரி எம்பி. மணி அடையாள அட்டைகளை இன்று வழங்கினர்.

News September 16, 2025

தர்மபுரி :MCA,M.Sc,BE/ B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு 127 காலிப்பணியிடங்கள் உள்ளது. சம்பளமாக ரூ.1,05,280 வரை வழங்கப்படும். மேனேஜர்(25-35 வயது) 2-3 ஆண்டுகள் அனுபவம் தேவை. சீனியர் மேனேஜர்(30-40 வயது) 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை. MCA,M.Sc(CS), BE/ B.Tech(CIVIL,MECH,ECE,EEE) படித்தவர்கள்<> இந்த<<>> லிங்க் மூலம் அக்.3 வரை விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 16, 2025

அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

image

தகுதி உடைய குழந்தைகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
மேலும் விவரங்களுக்கு இந்த <<17726947>>லிங்கை <<>>பார்க்கவும் தேவை உடையவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

News September 16, 2025

தர்மபுரி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000

image

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். <<17726934>>தொடர்ச்சி <<>> SHARE IT

News September 16, 2025

ஒகேனக்கலில் முழுவதுமாக தடை நீக்கம்

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

News September 16, 2025

தர்மபுரியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

image

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை 9 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊதியம் கிடைத்த பிறகே பணிக்குத் திரும்புவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 16, 2025

தருமபுரி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 16, 2025

தருமபுரியில் ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தருமபுரியில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு செப்.18 முதல் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவுடன், ரூ.5,600 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!