Dharmapuri

News March 29, 2025

தருமபுரியில் சுட்டெரிக்கும் வெயில்- தப்பிக்க சில டிப்ஸ்

image

தருமபுரியில் இன்று வெயில் சதமடித்துள்ளது(102.2). இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, 1. 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2. எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3. மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4. நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5. வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

சிவன் கோயில்களில் இன்று சனிப்பெயர்ச்சி வழிபாடு

image

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி இன்று தருமபுரியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இங்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி நடைபெறுவர்களுக்கு அதன் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு வாழ்க்கை வளமாகும். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 29, 2025

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை

image

மாரண்டஹள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமி +2 படித்து வந்தார். நேற்று முன்தினம், கால்நடைகளை கவனிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சிறுமியை பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் பெயரில் சக்திவேலை கைது செய்த போலீசார் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

News March 29, 2025

வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 100 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.

News March 28, 2025

திருமண தடை நீக்கும் கல்யாண காமாட்சி அம்மன்

image

தர்மபுரியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கல்யாண காமாட்சி கோவிலும் ஒன்று. கோட்டை கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் உள்ள தூண்கள் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவை ‘தொங்கும் தூண்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. மேலும் திருமணத் தடை நீங்க ஆணோ அல்லது பெண்ணோ 5 அஷ்டமிகளில் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு<> ஏற்படுத்தி<<>> தரப்படும்.

News March 28, 2025

தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்திய இருவர் கைது

image

குண்டலபட்டி பகுதியில் தனியார் விடுதியில் நேற்று மதிகோன்பாளையம் காவலர்கள் திடீர் சோதனை நடத்திய போது, அறையில் 34 வயது பெண்ணும் 28 வாலிபரும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்த பொழுது, தங்கும் விடுதியை சோலை கொட்டாயை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறை மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

News March 28, 2025

8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை 

image

பாலக்கோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரி ராமமூர்த்தி என்பவர் அந்த பகுதிக்கு வேலைக்கு சென்றபோது இச்சிறுமியுடன் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவத்தால் பயந்த சிறுமியை பள்ளிக்கு செல்லும்போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையறிந்த பெற்றோர்கள் காவல்துறைக்கு அளித்த புகாரின் பெயரில் ராமமூர்த்தியை போக்ஸோவில் கைது செய்தனர்.

News March 27, 2025

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

image

கடத்தூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த சம்பவத்தால் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி உணவின் தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!