Dharmapuri

News January 10, 2026

தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

தருமபுரி: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

தருமபுரி பொதுமக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரியில் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை நமது முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எதிர்வரும் 14. ஜனவரி 2026 அன்று சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ், தெரிவித்துள்ளார்கள்.

News January 10, 2026

தருமபுரி :உழவர் சந்தையின் விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.10) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.14, வெண்டைக்காய்: ரூ.32, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.18, கொத்தவரை: ரூ.65, பச்சைமிளகாய்: ரூ.24 ,பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 10, 2026

தருமபுரி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

தருமபுரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

தருமபுரியில் மழையால் மின்தடையா? உடனே CALL!

image

தருமபுரி மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

News January 10, 2026

தருமபுரி: பிரிந்த மனைவி; கணவன் விபரீத முடிவு!

image

பாப்பிரெட்டிப்பட்டி, கர்த்தானூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தவர் முருகன் (45). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனவேதனையில் இருந்த இவர், தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபிநாதம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

தருமபுரி: பிரிந்த மனைவி; கணவன் விபரீத முடிவு!

image

பாப்பிரெட்டிப்பட்டி, கர்த்தானூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தவர் முருகன் (45). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனவேதனையில் இருந்த இவர், தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபிநாதம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

தருமபுரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டம்!

image

தருமபுரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டம் நேற்று (ஜன.9) தொடங்கப்பட்டது. தருமபுரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இதில் அரசுத்துறை அதிகாரிகள், நகர மன்ற தலைவர் லட்சுமி மாது மற்றும்
மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

News January 10, 2026

தருமபுரி: ரயிலில் அடிப்பட்டு 18 பேர் பலி!

image

சேலம்-பெங்களூரு இடையே அமைந்துள்ள தருமபுரி வழியாக தினமும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 பயணிகள் ரெயில்கள் செல்கின்றன. தருமபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரெயில் தண்டவாளங்களை கடந்த போது ரெயிலில் அடிபட்டு 18 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!