Dharmapuri

News August 29, 2025

தருமபுரி: இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து!

image

தருமபுரி மக்களே உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆம் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை தடுக்கும் நோக்கில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31 கடை தேதி ஆகும். இதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான<> TNPDS போர்ட்டலில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். முடியவில்லை என்றால் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பயோமெட்ரிக் முறை மூலம் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 29, 2025

தருமபுரி மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி
▶️ ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி
▶️ சமுதாயக் கூடம், பூதனஹள்ளி
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 29, 2025

தர்மபுரி: தேன் எடுக்க சென்றவர் பலி

image

அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் நைனாமலை. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கழுத்தில் துண்டை கட்டி கொண்டு மரத்தில் தேன் எடுக்க முயன்றார். அப்போது தேனீக்கள் கொட்டியதால் வேகமாக கீழே இறங்கியதால் கையில் இருந்த சில்வர் பக்கெட் மாட்டிக்கொண்டது. இதனால் கழுத்தில் துண்டு இருக்கவே, இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

News August 29, 2025

தர்மபுரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி
▶️ ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி
▶️ சமுதாயக் கூடம், பூதனஹள்ளி
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.28) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக மனோகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 28, 2025

தருமபுரியில் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்பு.

image

தருமபுரி மாவட்டத்தில், விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13,058 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 12,319 விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார். இந்த இணைப்புகள் 01.04.2021 முதல் 31.03.2025 வரையிலான காலத்தில் வழங்கப்பட்டுள்ளன

News August 28, 2025

தருமபுரியில் பேச்சுப் போட்டிகள்: மாணவர்களுக்கு அழைப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டுப் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. செப்.1 அண்ணாவுக்கும், செப்.2 பெரியாருக்கும் போட்டிகள் நடைபெறும். தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வுகள் நடக்கும். இதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆக.28) நடைபெற்றது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தனர்.

News August 28, 2025

தர்மபுரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தர்மபுரி மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 28, 2025

தர்மபுரியில் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 104 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்து நாளை மாலை 5.45க்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!