India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்டம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (31) லாரிடிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆனந்தி என்ற மனைவியும், 5 மற்றும் வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று காலை பெண் குழந்தை ஹர்னிகாவை (2) சோமனஅள்ளியில் உள்ள தனது தாய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணாபுரம் அருகே மோட்டுப்பட்டியை சேர்ந்த பழனி இவரது மகள் மோனிகா பிளஸ் 2 படித்து வருகின்றார். உறவினர் ஒருவரின் இறப்பு சடங்கிற்காக பெற்றோருடன் நேற்று மார்ச் 09 ஒகேனக்கல்லுக்கு வந்த நிலையில், ஆற்றில் குளித்த போது மாணவி சூழலில் சிக்கி மூழ்கினார். மாணவி மோனிகாவை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 முதல் 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் 1.7.2025 தேதிபடி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
நல்லம்பள்ளி அடுத்த, புறவடை பகுதியை சேர்ந்த ஷேர்லின்பெல்மா, (வயது 44) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்தபின் மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மார்ச் 08 நடைபெற்ற மக்கள் தேசிய நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2359 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1088 வழக்குகளுக்கு சமரசத் தீர்வுகள் காணப்பட்டது மேலும் மேலும் இந்த வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகையாக 14 கோடியே 54 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டத்தில் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன் பெண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பணியாளர்கள் காவலர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தருமபுரியில் விரைவில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய அவர், “ தருமபுரி,சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 700 படுக்கை வசதிகளுடன் ரூ.72 கோடியில் தோழி மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். 24 மணி நேரமும் காவலாளியுடன், பயோமெட்ரிக் வசதியுடன் அமைய உள்ளது” என்றார். ஷேர் பண்ணுங்க
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றர்.
Sorry, no posts matched your criteria.