India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரிமங்கலம் ஏ முருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். கடந்த 19ம் தேதி காலையில் அவரது குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். மாலையில் அவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகை கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக 2024 மக்களவைத் தேர்தல் நேற்று(ஏப்.19) நடைபெற்றது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்த வாக்களிப்பில் புதிய இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவர்களும் வாக்களித்தனர். இறுதியாக தருமபுரி மாவட்டத்தில் 75.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6:00 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்ற தேர்தல் காலை 7 மணி அளவில் தொடங்கியது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் காலையிலிருந்து மாலை வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை 75% வாக்குகளை பதிவு செய்தனர். வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தனர்.
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணாம்பட்டி குள்ளனூர் அங்கன்வாடி மையம் பாகம் எண் 170ல் காலை சுமார் 10 மணியளவில், இளம் பெண் வாக்காளர் ஒருவர் காலையில் வாக்கு செலுத்துவதற்கு விரலுக்கு மை வைத்த பிறகு தனது வாக்கை பதிவு செய்யாமல் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், அவரை தொலைபேசியில் அழைத்து சுமார் அரை மணி நேரம் கழித்து தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்ததால் சிறிது நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவை பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை தருமபுரி எஸ்வி ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல்முறை ஓட்டுபோட வந்த பெண் ஒருவருக்கு டிஆர்ஓ பால் பிரின்சிலி ராஜ்குமார் பரிவட்டம் கட்டி வரவேற்றார்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாராளுமன்றத் தேர்தலையொட்டி இன்று காலை 8 மணிக்கு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி எர்ரப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி எண் 193இல் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரியில் அண்ணா சகரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள பூத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. முதல் 2 வாக்குகள் மட்டும் பதிவான நிலையிலேயே இயந்திரம் பழுதாகியதால், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நேற்று குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரது காலில் கண்ணாடி துகள்கள் காலில் பட்டு காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு அவரை மீட்டு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Sorry, no posts matched your criteria.