India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தமைக்காக அரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் நாளை மறுதினம் (ஜூன் 20) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாலக்கோடு அரசு ம.மே.நி. பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் மாணவி ஸ்ருதி அதிக மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், இன்று பாலக்கோடு தொகுதி எம்எல்ஏ அன்பழகன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் திரளான பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாணவி ஸ்ருதி 600க்கு 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் பந்தல் அமைப்பாளர் கேசவனின் விவசாய கிணற்றில் குடிநீர் தேடி வந்த மான் தவறி விழுந்தது. இதுகுறித்து அவர் பாலக்கோடு தீயணைப்பு துறை & வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் தத்தளித்த மானை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில்,
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.95 லட்சம் மதிப்பீட்டில்,
கெடகார அள்ளி மற்றும் சூரன்கொட்டாய் பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை, ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பைப்லைன் அமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ
ஆ.கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி இன்று (ஜூன் 17) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியாகத்தைப் போற்றி மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்” என்று இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி அங்கப்பனின் 2 கறவை மாடுகளை மர்மநபர்கள் நேற்று திருடி சென்றனர். இது குறித்த புகாரில் மாரண்டஅள்ளி போலீசார் முரளிதாஸ்(22), சக்திவேல்(24), அஜித்(23), தனுஷ்(25), முருகேசன்(44), சேட்டு(26) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கூட்டாக சேர்ந்து பாலக்கோடு பகுதிகளில் கறவை மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கர்நாடகா மாநிலம் மற்றும் பெங்களூரில் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் வரும் மழைநீர் மண் கலந்து கலங்களாக ஒகேனக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை நன்கு காய்ச்சி ஆறவைத்து குடிக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு வரும் ஜூன் 21 அன்று காலை 10 மணி முதல் 4 மாலை மணி வரை மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. மேலும் தகவலுக்கு 04342-233088 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
தர்மபுரி மாவட்டத்தில் ஜூன் 25ஆம் தேதிமுதல் 28ஆம் தேதி வரை தர்மபுரி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய ஜமாபந்தி கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் ஆகியவை செய்துகொள்ள வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.