India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், ஆட்சியர் சாந்தி, தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், ஒழித்தல் மற்றும் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் ஒழித்தல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து இன்று மனு அளித்தனர். இதில், மக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 377 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனையில் மது விற்பனை, ஓட்டல் & மது குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் என 14 பெண்கள் உட்பட 61 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1430 மதுபாட்டில்கள் 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று(நவ 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணிக்குள் தர்மபுரி மாவட்ட மீனவர் நலத்துறை உதவி இயக்குநருக்கு அனுப்புமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற துறைகளில் இருந்து பேசுவதாகவும் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக உங்களை மிரட்டி பணம் பறிக்கலாம். இது போன்ற ஏதேனும் அழைப்புகள் வந்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை பகிர வேண்டாம். மேலும் புகார்களுக்கு சைபர் கிரைம் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாணியாறு அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாணியாறு அணையின் முழு கொள்ளளவான 65 அடியில் 64 அடி அளவிற்கு தண்ணீரானது நிரம்பியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி பிடமனேரி ரயில்வே மேம்பாலம் அருகே இன்று (நவம்பர் 2) காலை ரயில் மோதி இறந்தவர் தர்மபுரியை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் நவின் (24) என தெரியவந்தது. தர்மபுரி ரயில்வே காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே காவலர் தங்கராசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
தீபாவளி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது பட்டாசுகளும், இனிப்புகளும் தான். தீபாவளியன்று பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும், உண்டும் தீபாவளியை கொண்டாடுவர். அதன் படி தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகி உள்ளது. மேலும், இனிப்பு வகைகள் ரூ. 18 கோடிக்கும், கார வகைகள் ரூ. 7 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இனிப்பு கடைகள் பேக்கரிகள், என சுமார் 40 டன் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 25 டன் கார வகைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் இனிப்பு வகைகள் ரூ.18 கோடிக்கும், கார வகைகள் ரூ.7 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. தருமபுரி நகரில் மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ள இனிப்பு, கார வகைகள் விற்பனையானது.
தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் தருமபுரி மாவட்ட மக்களின் வசதிக்கேற்ப போத்தனூர் – சென்னை செல்லும் முன்பதிவு செய்யப்படாத அதிவிரைவு சிறப்பு ரயிலானது பொம்மிடி, மொரப்பூர் ரயில் நிலையங்களில் நாளை(அக் 3) ஒரு நாள் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பொம்மிடி ரயில் நிலையத்திற்கு காலை 11.03 மணியளவிலும், மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 11.28 மணி மணியளவிலும் வந்து சேரும்.
Sorry, no posts matched your criteria.