India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மல்லிகுட்டை ஊராட்சி ராமியம்பட்டி அரசு மேல்நிலை ஆசிரியர் பாலாஜி 44 என்பவர் பணிக்கு சரியாக செல்லாமல் வேறு ஒருவரை வைத்து ஆசிரியர் பணியை மேற்கொண்டு வந்ததாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, புகாரை உறுதி செய்தனர். இந்நிலையில், ஆசிரியர் பாலாஜியை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்தது.காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற நவ.9,10,23,24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
தர்மபுரி மாவட்ட சதுரங்க சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காந்திநகர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்ட தலைவராக ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டிஎன்சி மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ராஜசேகரன், பொருளாளராக சேகர், இணை செயலாளர்களாக மாதேஷ், சிலம்பரன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் தற்பொழுது விளைச்சல் அதிகரிப்பால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் கூடை முதல் 15 ஆயிரம் கூடை என 225 டன் தக்காளி வரத்து உள்ளது. இதனால் உழவர் சந்தையில் கிலோ தக்காளி 32 ரூபாயிலிருந்து படிப்படியாக குறைந்து 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து தக்காளி விலை குறைந்து வருவதால் அதற்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி மாவட்ட குற்றவழக்கு தொடர்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களுக்கான ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொறுப்பு தகுதியான நபர்களிடமிருந்து 05/11/2024 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மின்தடை கால அட்டவணை வெளியீடு; 05/11/2024 தர்மபுரி, 08/11/2024இலக்கியம்பட்டி, 09/11/2024அரூர் 09/11/2024இராமினாஅள்ளி, 12/11/2024பொம்மிடி, 16/11/2024பாப்பிரெட்டிப்பட்டி, 16/11/2024அதியமான் கோட்டை, 16/11/2024 பென்னாகரம், 16/11/2024காரிமங்கலம், 19/11/2024மாம்பட்டி, 19/11/2024வெள்ளிச்சந்தை 19/11/2024சோகத்தூர், 21/11/2024மொரப்பூர் ஆகிய தேதிகளில் மின்தடை
விஜயவாடாவில் இருந்து, அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று, சேலத்தை நோக்கி சென்றது.டிரைவர் ரவி(35) என்பவர் ஓட்டி வந்தார்.நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி, தொப்பூர் போலீஸ் குடியிருப்புக்கு மோதி விபத்துக்குள்ளானது.டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீசார் விசாரணை.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள்,முதியோர் இல்லங்கள்,மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள்,போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள்,பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள் (ம) மனநல பாதிக்கப்பட்டுருக்கான இல்லங்கள் ஆகியவை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும்.உடனடியாக அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.