Dharmapuri

News November 11, 2024

தர்மபுரிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் வருகை

image

தர்மபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் (நவம்பர் 10) நேற்று வருகை தந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன் சால்வை அணிவித்து அமைச்சரை வரவேற்றனர்.

News November 10, 2024

பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

image

தருமபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு, RBI-யால் அங்கீகரிக்கப்படாத செயலிகளின் மூலம் கடன் பெறாதீர்கள் எச்சரிக்கையோடு இருங்கள். இல்லையெனில் மோசடி நபர்கள் உங்கள் சுய விவரங்கள் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள். மேலும் சைபர் கிரைம் புகார்களுக்கு: 1930 எண்களை அழைக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

News November 10, 2024

தேர்வு தோல்வியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

பாப்பிரெட்டிப்பட்டி, கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன், இவரது மனைவி சுஜிதா (29), இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுஜிதா, டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுக்கு படித்து வருகிறார். 4 ஆண்டுகள் நடந்த தேர்வில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த சுஜிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 10, 2024

ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தல் பணி குறித்து ஆய்வு

image

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேற்று ( நவ 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மற்றும் அரூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 26 வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக செயல்பட்டு வரும் 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தல் பணி குறித்து நேரடி ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 10, 2024

 வாராந்திர காவத்துப்பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

image

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு வாராந்திர காவத்துப்பயிற்சி நேற்று(நவம்பர் 9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கலந்துகொண்டு பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். உடன் காவல் அதிகாரிகள், அலுவலர்கள் இருந்தனர்.

News November 10, 2024

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்பி அறிவுறுத்தல்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர சட்ட பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நேற்று( நவம்பர் 09) நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன், பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரனை நடத்தி விரைந்து முடிக்குமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

News November 10, 2024

தர்மபுரியில் தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம்

image

தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணையம் சார்ந்த தொழிலாளர்களின் பணிபுரியும் டெலிவரி பாய்(DOME,ISM) போன்ற தொழிலாளர்கள் அதிக அளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

மத்திய கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை பெற விண்ணப்பம் பதிவு

image

மத்திய அரசு கல்வி நிறுவனம் நிறுவனங்களான IIT,IIM,IIT,NIT மற்றும் மதிய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த (BC,MBC/DNC) மாணவ மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தலுக்காக விரும்பும் தகுதியான மாணவர்கள்tngovtitsscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து 15/01/2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். என நவ.9 தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

தருமபுரில் முதல்வர் மருந்தகம் திறக்க விண்ணப்பிக்கலாம்

image

தருமபுரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும். இந்த மருந்தகங்கள் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

நரிப்பள்ளி அரசு பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம்

image

தர்மபுரி மாவட்டம் 2023-2024 கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரூர் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இந்த போட்டிகளில் நரிப்பள்ளி அரசு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சந்திரா கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

error: Content is protected !!