Dharmapuri

News February 13, 2026

தருமபுரி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

தருமபுரி மக்களே! அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கிலும் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று (பிப்.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பான பிரச்னைகள் குறித்து <>இங்கே கிளிக்<<>> செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க

News February 13, 2026

தருமபுரியில் கோயில் தான் டார்கெட்; அடுத்தடுத்து பயங்கரம்!

image

காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் மகாசக்தி மாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு உட்பட பூஜை பொருட்கள் மற்றும் காணிக்கை பணம் 1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

தருமபுரியில் இரவு முழுவதும் துடிதுடித்து பலி!

image

புதூரை சேர்ந்த காய்கறி வியாபாரி வெங்கடேஷ் குமார் (31). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இரவு முழுவதும் துடித்த இவரை நேற்று காலை பொதுமக்கள் பார்த்து ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

News February 13, 2026

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

image

பாலக்கோடையை சேர்ந்த பெண்ணுக்கு (23) தருமபுரியை சேர்ந்த அய்யப்பன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் தனது பெண் குழந்தையோடு (3) அய்யப்பனுடன் வசித்து வந்தார். ஆனால் அய்யப்பன் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் இருவரையும் வீட்டுக்குள் பூட்டியும் கொடுமைபடுத்தி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

, அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை

image

இன்று காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் மகாசக்தி மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு உட்பட பூஜை பொருட்கள் மற்றும் காணிக்கை பணம் ஒரு லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்கள்
தகுதி வாய்ந்த B.V.Sc படித்து (Tamil Nadu State Veterinary Council) பதிவு பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போலி கால்நடைமருத்துவர்கள், பராம்பரிய வைத்தியர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.எனத தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார்.

News February 12, 2026

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பிப்-12 தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், தவில்,வயலின்,மிருதங்கம்,வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டக் கலைஞர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0427-2386197 தொடர்புகொண்டு விண்ணபிக்க வேண்டும்.ஆட்சியர் சதிஸ் தகவல் தெரிவித்தார்

News February 12, 2026

தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News February 12, 2026

தருமபுரி: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

News February 12, 2026

பேருந்து நிலையத்தினை ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.12) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட அரசுத்துறை தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!