India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, நீர் நிலைகளில் குளித்து வருவது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வருகை புரிந்துள்ளனர்.
சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம தருமபுரி மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பதுஎன சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.
தர்மபுரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5783 மாணவர்களுக்கு தலா ரூ. 4900 மதிப்பிலும் 6,717 மாணவிகளுக்கு தலா ரூ. 4,760 மதிப்பு என மொத்தம் ரூபாய் 6 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் 12,500 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,67,579 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தருமபுரியில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த முகமது ஆசிக் என்பவர் ஜூலை 26ஆம் தேதி தனது காதலியின் அண்ணன்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர்க்கு விசிக சார்பில் ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தருமபுரி அருகே முகமது ஆசிக் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை மிக வன்மையாக கண்டிப்பதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆதிக்க சாதியவாதக் கும்பலின் இந்த ‘பித்துநிலை உளவியல்’ தற்போது தலித்துகளிடையேயும் பரவுவதாகவும், மத்திய, மாநில அரசுகள் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, ₹25 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ஆம் நாளான இன்று(ஆகஸ்ட் 3) தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ஆம் நாளான நாளை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்திற்கு 10 அரசு பேருந்துகளை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி ஐ வெங்கடேஸ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, நகர செயலாளர் லட்சுமி நாட்டான் மாது, மற்றும் துறை சார் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆடிப்பெருக்கு துவக்க விழாவிற்கு நாளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வருகை தர உள்ளார். அமைச்சரை வரவேற்க தொப்பூர் டோல்கேட் அருகில் காலை 9.00 மணிக்கு கட்சியின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கலந்து கொள்ளுமாறு திமுக மா.செ பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.