India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் மழையின் காரணமாக நாளை (02.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவேமழையின் காரணமாக குளம் குட்டை, ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள நீர் நிலைகளை சுற்றி பார்க்கவோ மற்றும் மின் கம்பங்களுக்கு அருகில் விளையாடவோ கட்டாயம் அனுமதிக்க கூடாது. என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று(டிச 2) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஃபெஞ்சல் புயல் காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மின்கம்பிகளை சரி செய்தல், மின் கம்பிகளுக்கு இடையே உரசல், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் என மக்கள் கண்டறிந்தால் அதனை கட்டணமில்லா தொலைபேசி எண் 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களின் அறிவிப்பு
தற்பொழுது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் நீர்நிலைகள் அருகில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது எனவும் மேலும் அறுந்து விழுந்துள்ளனர் கம்பிகளைதொட வேண்டாம் எனவும்மின்சாரம் தொடர்பான சாதனங்களை பயன்படுத்தும் மேலும்மழையின் காரணமாக பாதிப்புகள் இருந்தால் கட்டுப்பாட்டறை தொடர்பு கொள்வோம்
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பென்னாகரம், அரூர், பொம்மிடி, கடத்தூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். உங்க ஏரியாவில் மழையா?
தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா். அறுந்து விழுந்துள்ள மின் கம்பிகளை தொட வேண்டாம். மின்சாரம் தொடா்பான சாதனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். மழை பாதிப்புகள் இருப்பின் அதனை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் நாளையும் நமது மாவட்டத்திற்கு கனமழை எதிர்பார்க்கப்படுவதால் விடுமுறை தினம் என்பதாலும் அத்தியாவசிய பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்ன மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்
மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ மின்கம்பங்கள் உடைந்து இருந்தாலோ சாய்ந்து இருந்தாலும் மற்றும் மின்தடை குறித்து புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 9498794987 தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மின்வாரியம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக்கடக்க உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இன்று மழை பெய்துவரும் நிலையில், தருமபுரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இரவு 7 மணிவரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.