Dharmapuri

News December 5, 2024

தருமபுரியில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நாளை முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டவே இந்த முகாம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

பென்னாகரத்தில்  முட்டை ரூ.7 வரை விற்பனை

image

பென்னாகரத்தில் கடந்த வாரம் ஒரு முட்டை ரூ.5.10 முதல் ரூ.5.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று பென்னாகரத்தில் 90 காசு முதல் ஒரு 40 காசு வரை நாளுக்கு நாள் கிடுகிடு விலை உயர்ந்து, ஒரு முட்டை ரூ.6.45 காசு எனவும், சில்லறை விற்பனையில் ரூ.7 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 5, 2024

பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம்

image

தருமபுரியில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் (PMNAM) வரும் டிச.9ஆம் தேதி அன்று தருமபுரி கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தருமபுரி (கடகத்தூர்) எனும் விலாசத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது கீழ்காணும் தொலைபேசியில் 94422-86874, 8778447162, மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

News December 5, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும்.

News December 5, 2024

திருக்குறள் ஓவியங்கள் வரைய ஆட்சியர் அறிவுரை

image

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியில் உள்ள அங்கன்வாடி மையம் ஆய்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட  ஆட்சியர் சாந்தி அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சுவர்களுக்கு வண்ணம் பூசவும் திருக்குறள் ஓவியங்களை வரைய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

News December 5, 2024

மாவடிப்பட்டியில் கலெக்டர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மாவடிப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி (டிசம்பர் 4) நேரில் சென்று பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, சத்யா சீனிவாசன் சுமதி உடன் இருந்தனர்.

News December 4, 2024

108 ஆம்புலன்ஸில் பணிபுரிய நேர்முகத் தேர்வு

image

தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டிச 7ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. எனவே, தகுதியுடையவர்கள் தங்களது அசல் தகுதி சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்துக் கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8925940856
8925940858

News December 3, 2024

மின் கட்டணம் செலுத்து கால அவகாசம் நீட்டிப்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெஞ்சல் புயலின் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மின் கட்டணங்களை டிசம்பர் 10 ஆம் தேதி வரை எந்தவித அபராதமும் இன்றி கட்டிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 2, 2024

தருமபுரிக்கு துணை முதல்வர் உதயநிதி வருகை

image

 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் ஏமக்குட்டியூர் பிரிவு சாலையில் ஆய்வு மேற்கொண்டாா். அதனை தொடர்ந்து ஃபெஞ்சல் புயல் காரணமாக கன மழையால் பாதிக்கபட்ட இடங்களைக் ஆய்வு செய்தார். அப்போது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

News December 2, 2024

தருமபுரிக்கு விரையும் அமைச்சர் ராஜேந்திரன்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, இது குறித்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கிருஷ்ணகிரிக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் தருமபுரிக்கு அமைச்சர் ராஜேந்திரன் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!