India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தர்மபுரி மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் சுற்றுப்பகுதியில் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
தர்மபுரி மாவட்ட தடகள கழகம் சார்பில் இளையோர் தடகள விளையாட்டு போட்டிகள் வருகிற 1ந் தேதி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 14, 16, 18, 20 வயதுக்குட்பட்ட 4 பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பாக நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்தி பதிவு எண் பெற்று கலந்து கொள்ளலாம்.
தருமபுரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்பி சோ. மகேஸ்வரன் இன்று காலை புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை தொடர்ந்து சீர்படுத்துவதிலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சட்டப்படி விசாரணை செய்து தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதை பொருட்களுக்கு எதிராக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூகுள் பிளே ஸ்டோர் கடன் செயலிகளை (LOAN APP) பதிவிறக்கம் செய்து கடன் பெற்றால் உங்களது தனிப்பட்ட விவரங்களை திருடப்படுவதுடன் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து (MORPHING) உங்களை மிரட்டி பணம் பறிக்க நேரிடலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் என தெரிவித்துள்ளனர்.
தாட்கோ மூலம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பி.எஸ்.சி. கம்ப்யூட்டிங் டிசைன், பி.காம், பி.சி.ஏ., பி.ஏ. படிக்க வாய்ப்பு பெற்று தரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அனுகலாம் என கூறியுள்ளார்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அதகபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழுவதும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விண்ணப்பம் பதிவு செய்ய www.tntourismawards.com இணையதளத்தின் வாயிலாக 20/08/2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர் தர்மபுரி அவர்களை 89398963981 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய தொழில்முனைவோருக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு; 04343 230511, 8667679474, 9442274912 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என நிறுவனர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.