India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
தருமபுரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று இரவு கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யுமா?
தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா, பெரியார் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஆக 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ₹5000, 2ம் பரிசு₹4000, 3ம் பரிசு ₹3000, ஆறுதல் பரிசு ₹2000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நாளை சுதந்திர தினத்தை ஒட்டி 251 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கலாம். எனவே, பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
தருமபுரியில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையேற்று தேசிய கொடி ஏற்றவுள்ளார். பின்னர் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் மக்களுக்கு பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலையில் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் சிவாடி மற்றும் தர்மபுரி ரயில்வே நிலையத்திற்கு இடையில் பாரதிபுரம் – வெண்ணாம்பட்டி செல்லும் 60 அடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி தர்மபுரி எம்.பி. மணி இன்று (ஆக.13) ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஒன்றிய ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (16/08/2024) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.