Dharmapuri

News December 26, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

தருமபுரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார்.  தருமபுரியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

News December 26, 2024

விளைச்சல் போட்டிக்கு முதல் பரிசாக 5 லட்சம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி அறிவிப்பு. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்திருக்க வேண்டும். விளைச்சலின் போது 50 சென்ட் நிலப் பரப்பில் வேளாண்மை அதிகாரிகளின் மேற்பார்வையில் அளவை கணக்கிடப்படும். மேலும் இது பற்றி தகவல் அறிய அருகில் உள்ள வட்டார வேளாண்மை நிலையத்தை பார்வையிட்டு பயன் பெறலாம்.

News December 26, 2024

தர்மபுரி அருகே ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை

image

பஞ்சப்பள்ளி ஆற்றுப்பாலம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக இருப்பதாக நேற்று  இரவு பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் டிராக்டர் ஓட்டுநர் ரகு என்பது தெரியவந்தது. மேலும் காவலர்களின் முதல் கட்ட விசாரணையில் இவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

News December 26, 2024

தர்மபுரி ஆட்சியர் அறிவிப்பு 

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பானது தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை முதல் நடக்கவுள்ளது. இவ்வகுப்பானது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் நடைபெற உள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி  தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

மோளையானூரில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு

image

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள மோளையானூர் கிராமத்தில் தந்தை பெரியாருக்கு நினைவு நாள் அனுசரிப்பு இன்று நடைபெற்றது. இதில் திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு தந்தை பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

News December 24, 2024

ஒரு மாதத்தில் 1500 பேருக்கு நாய் கடிக்கு சிகிச்சை

image

தருமபுரி மாவட்டத்தில் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், மருத்துவக் கல்லூரி, பென்னாகரம் அரசு மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனைகளில் கடந்த மாதத்தில் மட்டும் 1500 நபர்கள் நாய் கடித்ததாக சிகிச்சை பெற்றதாக மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

News December 23, 2024

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27.12.2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News December 23, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MATHI (மதி) – திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட கணினிகள், அலுவலக உபகரணங்கள் (மற்றும்) மரச்சாமான்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை பயன்பாட்டில் இருந்து தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்களை கழிவு நீக்கம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று தெரிவித்தார்.

News December 22, 2024

தர்மபுரி மாவட்டத்தில் 363 கோடி பயிர் கடன் தள்ளுபடி

image

தர்மபுரி மாவட்டத்தில் 363 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் 1.12 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 40,000 விவசாயிகளின் நகை கடன், ரூபாய் 157 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். மேலும், சங்கங்களின் மூலம் சுமார் ரூபாய் 4,218 கோடியில் ரூ. 5 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News December 22, 2024

படை வீரர்களின் குடும்பத்தாருக்கு குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த செய்தி குறிப்பில் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தாருக்கென நாளை (டிச 23) சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தார்கள் ஏதேனும் புகார்கள் இருப்பின் அதனை குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுவாக கொடுத்து விரைவில் அதற்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!