Dharmapuri

News August 9, 2025

தருமபுரியில் குழந்தை பாக்கியம் அருளும் முக்கிய தலங்கள்

image

குழந்தை பாக்கியம் என்பது பலருக்கு ஒரு கனவாகவே உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டி பலர் மருத்துவத்தை நாடினாலும், இறை வழியிலும் நன்மை நடக்கும் என்று கோயிக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி தருமபுரியில் குழந்தை வரம் அருளும் சில தலங்களுக்கு சென்று வழிபடலாம்.
✔ தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்
✔ அமனிமல்லாபுரம் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்
✔ மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்
ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

தருமபுரி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். சூப்பர் வாய்ப்பு, டிகிரி முடித்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

தருமபுரியில் இன்று கனமழை வெளுக்கும்

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.

News August 9, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு முதல் இன்று (ஆக.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக எஸ்.கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்ட அரங்கில், தருமபுரி மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் இன்று (08.08.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா. ஓய்வூதிய இயக்கக் கூடுதல் இயக்குநர் அர்ஜுனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 8, 2025

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்ச் செம்மல் விருது

image

தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், தன்விவரக் குறிப்புடன் 2 நிழற்படங்கள், தமிழ்ப்பணி விவரம், குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் நகலை, 25.08.2025க்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,முகவரிக்கு அனுப்பவும

News August 8, 2025

32 கோடி மதிப்புள்ள பணிகள் நடைபெற்றதாக அறிவிப்பு.

image

நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நகராட்சிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையிலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதின் பொருட்டு தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.32.52 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

அபாகஸ் பயிற்சியினை கலெக்டர் தொடக்கி வைத்தார்

image

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அபாகஸ் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (08.08.2025) குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்

News August 8, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக எஸ் .கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

தர்மபுரியில் திருமண தடை நீக்கும் கோயில் எது தெரியுமா?

image

தர்மபுரி மாவட்டம் தகட்டூரில் அமைந்துள்ள மல்லிகார்ஜூனேசுவரர் ஆலயத்தின் சிறப்பு தெரியுமா? வள்ளல் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த தலம் இது. ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் இந்த கோயிலின் மிக சிறப்பான விழாவாகும். 2 டன் எடைக் கொண்ட தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் இது. இங்குள்ள கால பைரவரை வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கும், வறுமை நீங்கும், தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!