India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-2025 ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நாளை (31.08.2024) நடைபெறவுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள் (ம) விண்ணபிக்க தவறியவர்கள் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளதால் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார். மேலும், தொடர்புக்கு: 9600359646.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதாக மூன்றாயிரம் ரூபாய் கேடயம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தர்மபுரி மாவட்டம் நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களின் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேசிய சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் உத்தரவின் படி வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சமரசம் செய்து கொள்ளக் கூடிய வழக்குகளை முடித்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவர் ஆனந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24ஆம் தேதி மாநில அரசின் விருது 2024-2025 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதனை புரிந்த 13வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் செப் 30க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், 04342-233088 தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும். 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்பட்சத்தில் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இச்சேவையை கால்நடை வளர்ப்பு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் 47 தொழில் நிறுவனங்கள் ரூ. 700 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. எனவே இதன் மூலம் முதல் கட்டமாக 2,600 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி காவல்துறை சார்பில் புதன்கிழமைதோறும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதன் படி நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் 33 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட மனுதாரர்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 78 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில் 71 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 7 மனுக்கள் மேல்விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தின் மூலமாக போட்டோகிராபி மற்றும் வீடியோ கிராபி பயிற்சி 30 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது. காலை, மதிய உணவு உடன் கூடிய இலவச பயிற்சி மற்றும் NCVET சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். இதற்கு (https://forms.gle/y1CiR4GD7sLKzzMm6) என்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பயிற்சி துவங்கும் நாள்: 29.08.2024, இடம்:தர்மபுரி, தொழிலாளர் நல அலுவலகம் அருகில். ஷேர் பண்ணுங்க.
தண்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த குழந்தை மாதம்மாள் தம்பதியினரின் சந்தியா, ஹரிபிரசாந்த், சூரிய பிரகாஷ் என்ற 3 குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில் சந்தியா மற்றும் ஹரிபிரசாந்த் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு கல்லூரியில் மருத்துவம் படித்து வரும் நிலையில் தற்போது சூரிய பிரகாசம் நீட் தேர்வில் வெற்றி பெற்று கரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தர்மபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தமிழரசன், மணிகண்டன் என இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.