India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன், அரூர் வான்மதி, பென்னாகரம் குமரவேல் மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்க

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரே நாளில் 100 இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் பழைய சிக்கன், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டிகள், பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உபயோக படுத்திய கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதித்தனர். மேலும், பொதுமக்கள் உணவு தொடர்பாக 9444042322 என்ற எண்ணிலோ அல்லது <

கிருஷ்ணகிரி சுதந்திர தின விழாவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமையாசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்படி பையர்நத்தத்தை சார்ந்த தலைமை ஆசிரியர் குபேந்திரனுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <

பல தலைவர்கள் தங்கள் உயிர், உடைமை, உதிரம், இளமை என எல்லாவற்றையும் இழந்து இந்திய தேசத்தின் விடுதலையை பெற்று தந்துள்ளனர். இந்த 79வது சுதந்திர தினத்தில் தருமபுரி மாவட்ட தியாகிகளை பற்றி நினைவு கூறுவோம்.
✔ சிவகாமி அம்மையார் – இளம் வயதிலேயே இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து விடுதலைக்காக போராடியவர்.
✔ டி.என். தீர்த்தகிரியார் – இந்திய விடுதலைக்காக 8 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர்.
ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மற்றும் அரூர்க்கு (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தருமபுரி தலைமை அதிகாரியாக சிவராமன், அரூர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மற்றும் அரூர் சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

தர்மபுரி, நாளை சுதந்திர தின விழா நடைபெறுவதை ஒட்டி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தும், காவல் துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றும் சிறப்பிக்க உள்ளார்கள். பொதுமக்கள் இவ்விழாவிற்கு வருக தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு மற்றும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.
Sorry, no posts matched your criteria.