India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று சித்திரை மாதம் அமாவாசை என்பதால் கோயிலுக்கு செல்வது, முன்னோர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அமாவாசைக்கு பிரசித்தி பெற்ற வழிபட வேண்டிய 5 கோயில்கள்: 1.சிதம்பரம் அனந்திஸ்வரர் கோயில், 2.கடலூர் பாடலீஸ்வரர் கோயில், 3.விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில், 4.புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயில், 5.திருவக்குளம் பாசுபதீஸ்வரர் கோயில். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

அரியலூரை சேர்ந்தவர் சசிகுமார்(40). இவர் தனது ஆட்டை நேற்று வடலூர் சந்தையில் விற்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். குறவன்குப்பம் அருகில் சென்றபோது, உடல் உபாதை காரணமாக பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்சி நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் மோதி சசிக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான நேரடி சேர்க்கை முகாம் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 5.5.2025 முதல் 7.5.2025 வரை நடக்கிறது. இதில் 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டபடிப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை 9677943633, 9677943733 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுபோட்டி 9.5.2025 அன்று திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 10.5.2025 அன்று தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியிலும் நடைபெறும். இதில் கலந்துகொள்ள https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் 7.5.2025க்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE!

கடலூர் மாவட்டம், வில்வராயநத்தத்தில் உள்ள வில்வநாதீஸ்வரர் கோயிலில் வில்வநாதீஸ்வரர், திரிபுர சுந்தரி தாயாருடன் அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

விருத்தாச்சலம் பகுதியில் அண்மையில் போக்சோ வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரை போலீசார் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட 3 பேரிடமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி இருவரும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.25) மாலை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மாலை நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <
Sorry, no posts matched your criteria.