India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் மூடாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்த நிலையில் கேட் கீப்பர் பங்கஜ்குமாருக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் குரல் பரிசோதனை செய்ய வேண்டும் என சிதம்பரம் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

கடலூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இன்று (13.03.2026) காலை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இன்று (13.03.2026) காலை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (14.3.2026) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்களிலும் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரித்த போது, அவர் கடலூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைசெல்வம் (56) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், கலைசெல்வம் எப்படி இறந்தார் என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

சேத்தியாதோப்பு அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் வினோத் (27). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சேத்தியாதோப்பு நோக்கி சென்ற போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சேத்தியாதோப்பு அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் வினோத் (27). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சேத்தியாதோப்பு நோக்கி சென்ற போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.