Cuddalore

News August 24, 2024

கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

image

தாம்பரம் – வேளாங்கண்ணி (06119) இடையே வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியும், வேளாங்கண்ணி – தாம்பரம் (06120) இடையே ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்த சிறப்பு ரயிலில் 3 ஸ்லீப்பர், 3 மூன்றாம் வகுப்பு ஏசி, 7 பொதுப் பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

News August 24, 2024

மாத்தூர் அரசு பள்ளியில் பெற்றோர்கள் போராட்டம்

image

விருத்தாச்சலம் அருகே மாத்தூர் அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி இல்லை என பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர் கழிவறைக்குள் சென்று பார்த்தபின் அங்கு கதவோ, தண்ணீர் வசதியோ இல்லாததை கண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றமச்சட்டியுள்ளார்.

News August 24, 2024

கோயில் உண்டியலில் தீ வைத்த மாணவர்கள்

image

திட்டக்குடி தாலுகா பெண்ணாடத்தில் அருள்மிகு பிரளய காளீஸ்வரர் உடனுறை அழகிய காதலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு இன்று மாலை பள்ளிச் சீருடையில் வந்த மாணவர்கள் சிலர் உண்டியலில் தீக்குச்சி கொளுத்தி போட்டுவிட்டு ஓடி விட்டனர். இதில் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

News August 24, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். எனவே 35 வயதிற்குட்பட்டவர்கள் 30.8.2024-க்குள், கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 23, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (23/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

சிந்தனைச்செல்வன் தலைமையில் விசிக செயலாளர்கள் கூட்டம்

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட, மண்டல, நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்கள் கூட்டம், கடலூர் சுபா கிராண்ட் ஹோட்டலில் நாளை (24/08/2024) நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தலைமை தாங்க உள்ளதாக கடலூர் மாநகர வி.சிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

கடலூர் டி.எஸ்.பி இடமாற்றம்

image

கடலூர் மாவட்டத்தின் பொருளாதார குற்றப்பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த கே. அண்ணாதுரை நாகை மாவட்டத்தின் தடை அமலாக்க பிரிவின் டி.எஸ்.பி-யாக நியமனம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டார். இதேபோன்று தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 23, 2024

8,426 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

image

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 8,426 மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.

News August 23, 2024

கடலூர் மாவட்டத்தில் 4 தனிப்படைகள் அமைப்பு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து, அவர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி. ராஜாராம் 4 தனிப்படைகளை நியமித்துள்ளார். மேலும், இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

News August 23, 2024

கடலூர் அருகே பத்து வருடம் தலைமறைவாக இருந்தவர் கைது

image

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சரகத்தில் லாரி திருடிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். மேலும், மகாலிங்கத்தை கைது செய்ய மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் கொண்ட தனிப்படையினர் நேற்று வரை கைது செய்தது.

error: Content is protected !!