Cuddalore

News August 12, 2025

கடலூர்: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் FINE வருதா?

image

கடலூர் மக்களே.. உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே <<>>க்ளிக் பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 12, 2025

கடலூர்: IT Company வேலைக்கு இலவச பயிற்சி!

image

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்க்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 12, 2025

சிதம்பரம்: தாயுமானவர் திட்டம் தொடங்கி வைப்பு

image

முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதையடுத்து சிதம்பரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ-வுமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

News August 12, 2025

ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளி கைது

image

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்த் (28). பூக்கடை நடத்தி வரும் இவரை கடந்த 25.1.2025 அன்று புதுச்சேரி பாகூர் பங்களா தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் பாலாஜி (26) என்பவர் கொலை செய்தார். பின்னர் கடலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வந்து தலைமறைவானார். இதையடுத்து ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த பாலாஜியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News August 12, 2025

கடலூர்: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

கடலூர் மாவட்டத்தில் ஆணவக் கொலை ?

image

விருத்தாசலம் அரசக்குழியை சேர்ந்த முருகன்-ஜெயா தம்பதியர் மகன் ஜெயசூரியா (19). இவர், கடந்த மே மாதம் 18-ந்தேதி மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது பெற்றோர்கள் கூறுகையில், ‘என் மகன் வேறு சாதி பெண்ணை காதலித்ததால், அவனை ஆணவக் கொலை செய்துள்ளனர். என் மகன் இறப்பில் சந்தேகம் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.

News August 12, 2025

மயங்கி விழுந்து நபர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

image

திருச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முகுந்தன் (57). இவர் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில், வடலூர்- நெய்வேலி சாலையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்த முகுந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனனர்.

News August 12, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

கடலூரில் பிறந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

image

கடலூரில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யாரென தெரியுமா?
✅வள்ளலார்
✅எழுத்தாளர் ஜெயகாந்தன்
✅திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்
✅திக தலைவர் கி.வீரமணி
✅நடிகர் புகழ்
நம்ம கடலூருக்கு பெருமை சேர்த்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்

News August 11, 2025

கடலூர்: டிகிரி போதும்! அரசு வேலை!

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து பயனடைய செயுங்கள்!

error: Content is protected !!