Cuddalore

News September 23, 2024

300 விவசாயிகளுக்கு தேனீ வளர்க்க மானியம்

image

கடலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 600 விவசாயிகள் தேனீ வளர்க்க ரூ.14.40 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பாண்டில் 300 விவசாயிகள் தேனீ வளர்க்க ரூ.7.20 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேனீ வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்த பயிற்சி வழங்கவும் தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 22, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை அளவு முழு நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி காட்டுமயிலூரில் 67 மில்லி மீட்டரும், வேப்பூர் 45 மில்லி மீட்டர், விருத்தாசலத்தில் 12 மில்லி மீட்டர், பண்ருட்டியில் 9 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடியில் 5 மில்லி மீட்டர், கடலூரில் 4.4 மில்லி மீட்டர், சிதம்பரத்தில் 4.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News September 22, 2024

கடலூரில் நாளை திருக்குறள் வினாடி-வினா நிகழ்ச்சி

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் திருக்குறள் வினாடி-வினா நிகழ்ச்சி கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் நாளை (23ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதனை உலக திருக்குறள் பேரவை கடலூர் மாவட்ட அமைப்பு நடத்த உள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் சபீனா பானு தலைமை வகிக்கிறார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

News September 22, 2024

கடலூரில் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ‘உயர்வுக்குப் படி’ வழிகாட்டி நிகழ்ச்சி 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடலூர் செயின்ட் மேரிஸ் மகளிர் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் உயர் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல், வங்கிக் கடன் மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

News September 21, 2024

கடலூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூரில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலூரில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News September 20, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் தலா 25 பள்ளி, கல்லூரிகளில் ஓவியம் வரைதல், கட்டுரை போட்டிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளை நவம்பர் மாதத்திற்குள் முடிக்கவும், வெற்றி பெறுபவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி பரிசு வழங்கப்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 20, 2024

சிதம்பரம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது

image

சிதம்பரம் நகர போலீசார் நேற்று மாலை மந்தகரை, பூதகேணி பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சிதம்பரம் செங்கட்டான் தெருவைச் சேர்ந்த ராமலிங்க மகன் ரவி(44), பூதகேணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அன்வர் தீன்(62), நடராஜர் மகன் கணேசன்(41) ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

News September 20, 2024

ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆடூர்அகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (19.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

News September 20, 2024

சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் மீது குற்றச்சாட்டு

image

நடராஜர் கோவில் வழக்கு ஒன்றில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலுக்கு சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனி நபர்களுக்கு தீட்சிதர்கள் விற்பனை செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். கோவிலுக்கு சொந்தமாக தற்பொழுது எவ்வளவு பரப்பளவு நிலம் உள்ளது என்பது குறித்தும் அறநிலையத்துறை தாசில்தார் அறிக்கை அளிக்க ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News September 19, 2024

கடலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (20ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. எனறும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!