India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று (06.11.2024) பகல் 1 மணியளவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் 152 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (05/11/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி கொளஞ்சி அம்மாள் (55). இவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன வேதனை அடைந்த கொளஞ்சி அம்மாள் இன்று விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் இனி திருப்பி தர இயலாது. அவை அரசின் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என கால்நடை உரிமையாளருக்கு கடலூர் மாவட்ட ஆட்சிய ர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம், சாலையோர பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் அடுத்த உச்சிமேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன் (70). இவர் இன்று காலை பெரிய கங்கணாங் குப்பத்தில் உள்ள ஆற்றின் கரைக்கு சென்று இயற்கை உபாதை கழித்துவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் கை கால்களை கழுவ இறங்கினார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் புதுநகர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியன் மனைவி சுகன்யா. இவர் திட்டக்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணியாற்றி வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சரவணன் (36). சூதாட்ட பழக்கமுடைய இவர் கடன் வாங்கி சூதாடி உள்ளார். இதனால் கடன் தொல்லை அதிகமானதால் மன வருத்தத்தில் காணப்பட்ட சரவணன் இன்று ரெட்டிச்சாவடி அருகே கம்பளிக்காரன் குப்பத்தில் உள்ள சுடுகாடு அருகில் தேக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டிச் சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அரிய கோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் 10 ஆண்டுகளாக கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் இருப்புப் பாதை காவல்துறை சார்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் அருணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்ற இரு வீரர்கள்,பயிற்றுநா்கள், உடற்கல்வியாளர்களுக்கு ரூ.1 லட்சம், தங்கப்பதக்கம ஆகியவை வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலா், கடலூா் என்ற முகவரிக்கு வரும் 11 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Sorry, no posts matched your criteria.