Cuddalore

News September 26, 2024

பெண்ணாடத்தில் “உயர்வுக்கு படி” சிறப்பு முகாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ‘நான் முதல்வன் உயர்வுக்குப் படி’ வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்ணாடம் சரோ ரத்தின அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் உயர்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல், வங்கிக் கடன் மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 26, 2024

கடலூர்: 2360 சாலை விபத்தில் 422 பேர் பலி

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 3117 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 580 பேர் பலியான நிலையில் 3783 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 2360 சாலை விபத்து நடந்ததில் 422 பேர் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News September 25, 2024

வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

image

வேப்பூர் அருகே நகர் சேர்ந்த ஆறாம் வகுப்பு படித்துவரும் குமாரவேல் என்பவரது மகன் சிறுவன் ராஜேஷ்குமார் பள்ளி முடிந்து தனது நண்பர்கள் கிராமத்தில் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 25, 2024

விருத்தாசலத்தில் பேருந்து வசதி வேண்டி மனு

image

விருத்தாசலம் அடுத்த வேப்பூரிலிருந்து பிஞ்சனூர் வரை புதிய பேருந்துவழித்தடத்தை உருவாக்கி புதிய பேருந்து இயக்கிடக்கோரியும், பிஞ்சனூர் கிராமத்திற்கு ஆழ்துளை கிணறுடன் (ஃபோர்) கூடிய மினி டேங்க் அமைத்து தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மனு அளித்தனர்.

News September 25, 2024

சமுதாய அமைப்பாளர் பணிக்கு கடலூர் ஆட்சியர் அழைப்பு

image

கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 35 வயதுக்குட்பட்டவர்கள் 30.9.2024 அன்றைக்குள் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம்-607001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 25, 2024

கடலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு, இ-சேவை மையம் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம். இதில் ஒரு ஏக்கர் சம்பா பயிருக்கு ரூ.548, மக்காச்சோளத்திற்கு ரூ.375, பருத்திக்கு ரூ.412, உளுந்திற்கு ரூ.231-ம் வருகிற 15.11.2024-க்குள் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 24, 2024

கடலூர் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்

image

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இன்று காலை சிறப்பு குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கழிவறை அருகில் ஒரு பட்டன் செல்போன், சிம் கார்டு, 3 பேட்டரிகள் மண்ணில் புதைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போனை சிறை வளாகத்தில் மண்ணில் புதைத்து வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 24, 2024

கடலூர் எஸ்பி அலுவலகத்தில் ஆவிணங்குடி பொதுமக்கள் புகார்

image

ஆவிணங்குடி பகுதி மக்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது நாங்கள் 50க்கும் மேற்பட்டோர் எங்கள் பகுதியில் வசித்து வரும் நபரிடம் நாங்கள் அனைவரும் 4 கோடி அளவில் பணம் கொடுத்தோம் அவர் அதற்கு வட்டி தருவதாக கூறினார். ஆனால் கடந்த 2 வருட காலமாக எதுவும் தரவில்லை, அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் கூறியிருந்தார்.

News September 24, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

image

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு சென்னை கிண்டியில் 14.10.2024 அன்று தொடங்க உள்ளது. இதில் 21 முதல் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் சேர்ந்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 7845358815 மற்றும் 8668107552 என்ற எண்களிலும், https://www.youtube.com/shorts/GBnEEtTOiul, www.editn.in என்ற இணையதளத்தில் காணலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.

News September 23, 2024

கடலூரில் 27-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!