India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 98 ஆயிரம் மதிப்பில் நர்சரி கார்டன் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி உமா (40). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த சோமு என்பவர் தன்னை தாக்கியதாகவும், இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மதியம் 1 மணி அளவில் கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் அதனை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஆக்.05 ஆம் தேதி சேப்பாக்கம் நிருபர்கள் சங்ககட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்
பண்ருட்டியில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் வழிப்பறி செய்த இருவர் கைது. பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களிடம் செல்போன்கள் வழிப்பறி திருட்டு நடந்ததால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வாகன சோதனையில் பண்ருட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த காமேஷ் (24), இவரது நண்பர்மதன் (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 18வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், வீட்டு வழி கல்வியில் பயிற்சி பெற்று வரும் மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கும் மருத்துவ முகாம் ,அளவீட்டு முகாம்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் ஆட்சியர் அறிவிப்பு
பண்ருட்டி அடுத்த சொரத்தூரை சேர்ந்தவர் வடிவேல் மகன் சங்கர் (27). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று சங்கர், தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (புதன்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்றும், இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (29/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2.10.2024 அன்று FL-1 மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் FL-2/FL-3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள், மதுபான கூடங்களை மூட வேண்டும். இதைமீறி மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் கலெக்டர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (28/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் முருகன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் பொன்மகரம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.