Cuddalore

News October 8, 2024

அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி

image

அக்டோபர் 2ஆம் நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 23.10.2024 அன்று கடலூர், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

சிதம்பரம்: விசிக பிரமுகர் மீது தாக்குதல் 5 தீட்சிதர்கள் மீது வழக்கு

image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று இரவு தீக்ஷதர்கள் கிரிக்கெட் விளையாடியதாகவும் அதை வல்லம்படுகை சேர்ந்த வி.சி.க முகாம் செயலாளர் இளையராஜா செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய ஐந்து தீக்ஷதர்கள் மீது சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News October 8, 2024

சிதம்பரம் அருகே 17 வயது மாணவி கர்ப்பம்: ஒருவர் கைது

image

சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் மணிகண்டன் இவர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பிளஸ்2 படிக்கும் 17 வயதுடைய மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், மாணவியை, மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மணிகண்டனை கைது செய்தனர்

News October 7, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்துப்பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (07/10/2024) கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் பொட்டா, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

கடலூர்: 415 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 415 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வுகாண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 7, 2024

பண்ருட்டி அருகே நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தர்ஷ்வந் (12), பிரதிஷா (7) ஆகியோர் தனது பெற்றோர்களுடன் பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது செங்கல் சூலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் அண்ணன், தங்கை இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுஹியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News October 7, 2024

கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 7868881317, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் நாகார்ஜுன் (23). இவர் நேற்று சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் படியில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். விருத்தாசலம் அருகில் சென்ற போது நாகார்ஜுன் ரயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 6, 2024

சிதம்பரம் அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்பு

image

சிதம்பரம் வட்டம் பிச்சாவரம் பஞ்சாயத்து சேர்ந்த செஞ்சி காலனி கிராமத்தில் மெயின் ரோடு அருகாமிலேயே காலை 6 மணி அளவில் பெண் குழந்தை ஒன்று கன்டுபிடிக்கப்பட்டது. அது முறைப்படி அரசிடம் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 6, 2024

கடலூர்: பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் இணையதளம் மூலமாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் 19.10.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!