Cuddalore

News October 19, 2024

கடலூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 19, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில் 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளைப் பெற்றவர்கள் நவம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். ஷேர் செய்யவும்

News October 19, 2024

உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தாட்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 19, 2024

உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7%) ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 18, 2024

கடலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 10 மணி வரை கடலூர் மாவட்டத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

News October 18, 2024

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை

image

கிள்ளை அடுத்த பொன்னன் திட்டு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தொழிலாளி வீரமணி (32). இவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன வருத்தத்தில் கடந்த சில நாட்களாக இருந்தார். இந்த நிலையில் இன்று காலை வீரமணி தனது வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 18, 2024

கடலூரில் நாளை மின்தடை

image

கடலூர் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திட்டக்குடி, பி முட்லூர், செம்மங்குப்பம் , பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருதாச்சலம், காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை, ஆலப்பாக்கம், எறையூர், கருங்குழி, மேலப்பாளையம், புவனகிரி, நெல்லிக்குப்பம், கிள்ளை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

News October 17, 2024

கடலூரில் 19-ம் தேதி பொது விநியோகத் திட்ட முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 19.10.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், மற்றும் திருமுட்டம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 17, 2024

திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (17.10.2024) துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News October 17, 2024

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையால் ஆரஞ்சு அலாட் விடுபட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்திருந்தது. புயல் ஆந்திரா நோக்கியே சென்றதால், மாவட்டத்தில் மழை குறைந்ததால், இன்று இரண்டு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

error: Content is protected !!