India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தவர்களில் 24 பேருக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 145 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் ரூ.5 லட்சம் குறைந்த வட்டியில் கடனாக வழங்குகிறது. இதற்கு www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கம் கடலூர் மாவட்டம், வடலூரில் 23.10.2024 அன்று காலை 10.30 மணி முதல் 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றவுள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்தார்.
நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று (21.10.2024) காலை 8.30 மணி நிலவரப்படி நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணி அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது என அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன், பொதுச் செயலர் .சுரேஷ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் விநாயகம் மகள் வைஷ்ணவி (26). முதுநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கும் வைஷ்ணவி நேற்று பணி முடிந்தபின் அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அக்டோபர்-21 (நாளை) மற்றும் அக்டோபர்-23 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குகுறைந்த வாடகையில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் இ-வாடகை செயலியான ‘உழவன் செயலி’ மூலம் குறைவான வாடகையில் இயந்திரங்கள், மற்றும் கருவிகளை வீட்டிலிருந்தே பதிவு செய்து பயன் பெறலாம். பதிவு செய்ய, செயலில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தேசிய கல்வி நிறுவனம் நடத்திய விழாவில் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடம் சிறந்த புதுமை மிக்க பள்ளி மற்றும் சிறந்த தரமான கல்வியை வழங்கும் பள்ளி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் வழங்க, பள்ளியின் சார்பில் பள்ளியின் துணை இயக்குனர் பார்வதி ஹரி கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்னிக்கு சென்று கொண்டுருந்த கார் சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெங்களூரை சேர்ந்த கங்காலட்சுமி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.