India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கடலூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.
வேப்பூர் கூட்டுப்பாதை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் நோக்கி சென்ற ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி ஆட்டோவிற்கு முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியதில் தொண்டாங்குறிச்சியை சேர்ந்த ரத்தினவேல் மகன் சுப்ரமணியன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த ஆட்டோவில் பயணம் செய்த 12 பேர் காயங்களுடன் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (எண் 06155) இன்று (அக்.,30) இரவு 9.10க்கு புறப்படுகிறது. இந்த ரயில் 8 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இன்று இரவு 9.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பண்ருட்டி கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை வழியாக திருச்சிக்கு நாளை காலை 5:45 மணிக்கு செல்கிறது. ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. SHARE IT.
கடலூரில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அருகில் விதிகளை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். இதையடுத்து கடலூரில் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்கள் மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அனைத்தும் சட்டபூர்வமாக பதிவு மற்றும் உரிமம்பெற 1 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தினம் தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.,29) கடலூர் உதவி ஆய்வாளர் பிரசன்னா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாடுவதற்காக பலர் ஜவுளிகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இனிப்பு பலகாரங்களில் அதிக நிறப்பொருள் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிக நிறப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை கவனமாக வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் வரும் 31ஆம் தேதி நவம்பர் 1ஆம் தேதி இரு தினங்களும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தீபாவளி அன்று காலை மழை செய்யும் என்பதால் தீபாவளி கொண்டாடும் கடலூர் மக்கள் சற்று கலக்கத்துடன் உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு தாம்பரம் – மானாமதுரைக்கு தீபாவளி சிறப்பு ரயில் (06019) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று மானாமதுரைக்கு நாளை மறுநாள் (31/10/2024) காலை 3.45 மணிக்கு சென்றடையும்.
Sorry, no posts matched your criteria.