Cuddalore

News November 8, 2024

கடலூர் மாவட்ட காவல்துறைக்கு பாமக நிறுவனர் கண்டனம்

image

அம்பேத்கர் சிலைகளை உடைக்க பாமக முயற்சி என கடலூர் மாவட்ட காவல்துறையினர் பொய்யை பரப்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே என்றும் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை எங்கேனும் அவமதிக்கப்பட்டால் அதற்கான முதல் எதிர்ப்புக்குரல் வருவது என்னிடம் இருந்துதான் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

News November 8, 2024

கடலூரில் தாய் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

கடலூர் புதுக்குப்பம் எஸ்.ஆர். காலனியை சேர்ந்தவர் பாலாஜி மகள் சரண்யா (17). கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரண்யா இன்று செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது தாய் கல்பனா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 6, 2024

பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

image

வன்முறையை ஏற்படுத்தும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பாமக எடுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 6, 2024

கடலூரில் சுகாதார துறை அமைச்சர் இன்று ஆய்வு

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று (06.11.2024) பகல் 1 மணியளவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார்.

News November 6, 2024

கடலூர் ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் 152 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்

News November 5, 2024

கடலூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (05/11/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

வேப்பூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

image

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி கொளஞ்சி அம்மாள் (55). இவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன வேதனை அடைந்த கொளஞ்சி அம்மாள் இன்று விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2024

கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

சாலைகளில் பராமரிப்பின்றி  சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் இனி திருப்பி தர இயலாது.  அவை அரசின் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என கால்நடை உரிமையாளருக்கு கடலூர் மாவட்ட ஆட்சிய ர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம், சாலையோர பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 5, 2024

கடலூரில் ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

image

கடலூர் அடுத்த உச்சிமேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன் (70). இவர் இன்று காலை பெரிய கங்கணாங் குப்பத்தில் உள்ள ஆற்றின் கரைக்கு சென்று இயற்கை உபாதை கழித்துவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் கை கால்களை கழுவ இறங்கினார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!