Cuddalore

News September 8, 2025

பண்ருட்டி அருகே ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

image

பண்ருட்டி – திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கு இடையே நேற்று (செப்.7) ரயில்பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில் கடலுார் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 8, 2025

கடலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர் மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 8, 2025

கடலூர்: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <>இங்கே கிளிக் செய்து<<>> 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 8, 2025

கடலூர்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

image

கடலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். SHARE IT NOW…

News September 7, 2025

கடலூர்: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

கடலூர் மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 7, 2025

பண்ருட்டி: ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்எல்ஏ

image

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினைப் பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சிஎன்றும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.

News September 7, 2025

மருத்துவமனைக்கு சென்று MLA ஆறுதல்

image

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக பேருந்தில் பயணம் செய்தபோது அதிகாலையில் விபத்து ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், விருத்தாசலம் எம்எல்ஏ இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

News September 7, 2025

கடலூர்: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் வேலை!

image

கடலூர் மக்களே, காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (செப்.,8) கடைசி நாளாகும். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 7, 2025

அண்ணாநகர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்

image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காட்டுமன்னார் கோயில் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

News September 7, 2025

அண்ணாநகர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்

image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காட்டுமன்னார் கோயில் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

error: Content is protected !!