Cuddalore

News September 9, 2025

கடலூர்: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

image

கடலூர் இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <>இங்கே க்ளிக் செய்து<<>> Register பண்ணுங்க. இப்பணிக்கு மாதம் ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

கடலூர்: வெலிங்டன் ஏரி சீரமைக்க ரூ.130 கோடி

image

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நூறாண்டுகள் பழமையான வெலிங்டன் ஏரி மற்றும் கால்வாயை சீரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
கடலூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்திருந்தார். அதன்படி, ஏரியின் கரைகளை சீரமைக்க ரூ.74 கோடி, முதன்மை கால்வாய் சீரமைப்புக்கு ரூ.20 கோடி உபரிநீர் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News September 9, 2025

கடலூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகனம் வழங்கல்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை இன்று (08.09.2025) வழங்கினார். அப்போது தனித்துணை ஆட்சியர் தங்கமணி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 8) கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய எஸ்பி

image

கடலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் காவல்துறை பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஒவிய போட்டிகளை வைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மனிஷா,சார்லஸ், அப்பாண்டைராஜ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

News September 9, 2025

கடலூர்: பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் டி.ஆனந்த், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் Bumble B அறக்கட்டளை மூலம் கல்வி 40 செயலியை தொடங்கி வைத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவியினை இன்று (8.09.2025) வழங்கினார்.

News September 9, 2025

கடலூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் இன்று (08.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

image

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்ன கண்ணாடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் எல்லைப்பிடாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

News September 8, 2025

கடலூர்: கட்டணம் இன்றி வக்கீல் வேண்டுமா?

image

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
▶️கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04142-212660
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

பண்ருட்டி அருகே ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

image

பண்ருட்டி – திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கு இடையே நேற்று (செப்.7) ரயில்பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில் கடலுார் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!