India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணங்கள் தடுத்தல் மற்றும் தவிர்த்தல், மேலும், சிறப்பான செயல்கள் மற்றும் தனித்துவமான சாதனைகள் செய்திருத்தல் போன்றவைகளில் வீரதீர செயல் புரிந்துவரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருது பெற https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.12.2024 க்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரையில் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
வேப்பூர் அடுத்துள்ள ஏ.சித்தூரில் கடலூர் – சேலம் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆருரான் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபில் ரானா (54), இருசக்கர வாகனத்தில் வந்த வேப்பூர் லட்சுமணபுரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (18) ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm//scholarship schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டு, நல்லாத்தூர், சிற்றரசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.18) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இப்பகுதிக்குட்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நவம்பர் 20-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
வடலூர் அருகே ஓனாங்குப்பம் செல்லும் சாலையில் சுண்ணாம்பு ஓடை உள்ளது. அந்த ஓடையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து மிதந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊர் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காட்டுமன்னார்குடி அடுத்த மேல்பருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலரான வீராசாமி (65) கடந்த 2012-ம் ஆண்டு தானே புயலில் பாதிக்கப்பட்ட அதேபகுதியை சேர்ந்த ஆசைதம்பி என்பவருக்கு புயல் நிவாரண தொகை வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வீராசாமிக்கு இன்று கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் சிறப்பு நீதிபதி நாகராஜன், 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியை இணைக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரத்து வருவதால் தரை பாலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த அருளை அனிதாவின் தந்தை சக்திவேல், தாய் ராஜகுமாரி மற்றும் உறவினர்கள் அருணை தாக்கிவிட்டு மகள் அனிதாவை கடத்தி சென்றனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.