Cuddalore

News September 10, 2025

கடலூரில் எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று (10.9.2025) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

News September 10, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிட முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (10.09.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளார்.

News September 10, 2025

கடலூர் மாவட்டம் ஒரு பார்வை!

image

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 10, 2025

குள்ளஞ்சாவடி பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News September 10, 2025

கடலூர்: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

பண்ருட்டியில் அகில இந்திய விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் லோகநாதன் தலைமையில் 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 10, 2025

கடலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

கடலூர் பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>> இதற்கு கடைசி தேதி 21.09.2025 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

கடலூர்: ஒரே நாளில் 2,241 மூட்டை வேளாண் விளைபொருட்கள் வரத்து

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு, விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து தினந்தோறும் வேளாண் விளை பொருட்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த வகையில் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2.241 மூட்டை வேளாண் விளை பொருட்கள் விற்பனைக்கு வந்தன.

News September 10, 2025

கடலூர்: மின் தடை அறிவிப்பு!

image

கடலூர் கேப்பர்மலை மின் நிலையத்தில் 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழி சோதனைப்பாளையம், சான்றோர் பாளையம், திருப்பாதிரிபுலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ். புதுார், எம். புதுார், மணக்குப்பம் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

News September 10, 2025

கடலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகின்ற 13.09.2025 அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-290039 மற்றும் 9499055907, 9499055908 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

கடலூர்: நேரில் சென்று ஆறுதல் கூறிய எஸ்பி

image

விருத்தாச்சலத்தில் போதையில் 4 நபர்களை தாக்கி விட்டு தலைமறைவு குற்றவாளிகள் கந்தவேல் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிய கந்தவேல் என்பவரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொரு குற்றவாளி சிவா என்பவர் கீழே விழுந்து இடது காலில் எலும்பு முறிவு. இருவரையும் பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி தாக்கியதில் படுகாயமடைந்த காவலர்களை எஸ்பி சென்று ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!