India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். உடன் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர் ராவ், ஆர்பிஐ உதவி தலைமை மேலாளர் ஸ்ரீதர், நபார்டு உதவி தலைமை மேலாளர் சித்தார்த்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (எல்டிஎம்) அசோக்ராஜா உட்பட பலர் உள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படாமலுள்ள 1078 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் அரசு வழிகாட்டுதலின்படி உரிய முறையில் விண்ணப்பித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்கு தொகையை செலுத்தி குடியிருப்பினை பெற்று பயடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, பக்தர்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதர்களின் பாரம்பரியமான வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்திட காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 34 இடங்களிலும், ஸ்ரீமுஷ்ணம் 42, விருத்தாசலம் 32, சிதம்பரம் 25, திட்டக்குடி 33, புவனகிரி 24, குறிஞ்சிப்பாடி 9, வேப்பூர் 12, கடலூர் 15, பண்ருட்டியில் 9 இடங்களிலும் என மொத்தம் 235 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பருவமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் பணி நாளாக நாளை (11.01.2025) சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் நாளை (11.01.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டும் என கடலூர் முதன்மைக் கல்லி அலுவலர் தெரிவித்துள்ளார்.
நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக 04142-220700 என்ற எண்ணிற்கு விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் நந்தனார் அரசு ஆதிதிராவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கலெக்டர் நேற்று பாராட்டு தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துடன் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் அறிவுத்திறன், சுகாதாரம் உள்ளிட்டவைகளில் அடிப்படையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளியாக சிதம்பரம் நந்தனார் அரசு திராவிடர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன விடுதலை அரசியல் என்று இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன். இன்றோடு நாதகவில் இருந்து விலகுகிறேன். இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. 15 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த முகாமில் 10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்வோர் தங்கள் கல்வி சான்றுகள், அடையாள அட்டைகளுடன் வருமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். SHARE IT.
கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 11.1.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.