Cuddalore

News November 30, 2024

கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

கடலூர்: அவசர தேவைக்கு இலவச ஆம்புலன்ஸ் 

image

கடலூரில் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக கடலூர் பகுதி பொதுமக்கள் தங்கள் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டால் 99524 91510 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம். அவர்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் என விசிக கடலூர் மாநகர செயலாளர் மு. செந்தில் அறிவித்துள்ளார்.

News November 30, 2024

கடலூர் மாவட்டத்துக்கு நாளை ‘ரெட் அலெர்ட்’

image

வங்கக்கடலில் நிலவும் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானாது இன்று மாலை மரக்காணம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை (டிச.1) கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 32 குடிசை வீடுகள் சேதம்

image

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டத்தில் இதுவரை மேலும் 32 குடிசை வீடுகள் மற்றும் 4 காங்கிரீட் வீடுகள் பாதி அளவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

கடலூர் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு 

image

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை குடிபோதையில் சென்ற வில்வ நகரை சேர்ந்த அமர்நாத் (29) என்பவர் அங்கிருந்த செவிலியர் சரண்யாவிடம் வீண் தகராறு செய்து, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர்.

News November 29, 2024

கடலூர் மாவட்டத்தில் 191 தற்காலிக தங்குமிடங்கள் தயார் – ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள துணை ஆட்சியர் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, மாநகராட்சிக்கு அலுவலர்கள் நியமனம். 28 பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள், 30 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

கடலூர்: முகாம் அமைவிடங்கள் அறிவிப்பு

image

கடலூரில் புயல் மற்றும் கனமழை முன்னிட்டு முகாம் அமைவிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிகே.என்.சி கல்லூரி, தொழிற்பயிற்சி மையம் செம்மண்டலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, செம்மண்டலம் மாநகராட்சி தெரு.செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளி, தெரு. செயின்ட் மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம்அரசு மஞ்சக்குப்பம் செயின்ட் பள்ளி, வேணுகோபாலபுரம் மஞ்சக்குப்பம் அரசு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 29, 2024

கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( நவ.30) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆதித்யா செந்தில் உத்தரவிட்டார். புயல் எச்சரிக்கை காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவறுத்தப்பட்டுள்ளது.

News November 29, 2024

கடலூர் துறைமுகத்தில் 7 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இதற்கு துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும் என பொருள். துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையைக் கடந்து செல்லும் என்று பொருள். துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை அறிவிக்க 7 எண் கூண்டு ஏற்றப்படுகிறது.

error: Content is protected !!