Cuddalore

News December 20, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி நாளை (21.12.2024) சனிக்கிழமை, கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதுஇதில் தகுதி பெறும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 28.12.2024 அன்று விருதுநகரில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

குமராட்சியில் ரூ.3 ஆயிரம் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

image

குமராட்சி போலீசார் நேற்று மாலை இளங்கம்பூர் கிராம பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (55) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

News December 19, 2024

கடலூரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (டிச- 20) விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 19, 2024

பண்ருட்டி: விடுபட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்

image

தமிழக அரசு அறிவித்த ஃபெஞ்சல் புயல் வெள்ள நிவாரணம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையை பாதிக்கப்பட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தொகுதி முழுவதும் வழங்கக் கோரி பண்ருட்டி எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விடுபட்ட சுமார் 25000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது.

News December 19, 2024

விருத்தாசலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 28 பேர் கைது

image

அம்பேத்கரை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இழிவுபடுத்தி பேசியதாக கூறி அமித்ஷாவை கண்டித்து நேற்று விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

News December 19, 2024

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம்

image

கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக ரூ.2,000, அரிசி-5 கிலோ, துவரம் பருப்பு-1 கிலோ வழங்கப்படும் நிலையில், கூடுதல் நிவாரணமாக சர்க்கரை-1 கிலோ கடலூர், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள 310 நியாயவிலை கடைகளில் உள்ள 1,95,983 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

News December 19, 2024

மாணவி பாலியல் வன்கொடுமை: அரசு பள்ளி ஆசிரியர் கைது

image

சேத்தியாத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 17 வயது மாணவி தற்போது சென்னையில் படித்து வருகிறார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர் விசாரித்த போது, கடந்த ஆண்டு வேதியல் ஆசிரியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, ஆசிரியரை நேற்று கைது செய்தனர்.

News December 18, 2024

கடலூரில் வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர்

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச.20 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வுசெய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவுள்ளது. எனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

News December 17, 2024

வர்த்தக சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம்

image

 திருச்சியில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுக்குழு அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பரங்கிபேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழு கூட்டத்தில் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்திட வரும் மார்ச் மாதம் தலைநகர் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News December 17, 2024

கடலூர்: அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா முதல்நிலைப் போட்டி தேர்வு 21.12.2024 அன்று கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கு tnpscm2cuddalore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!