India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 26-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
வேப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடுத்த ஆண்டிற்கான தொழிற் பயிற்சியாளர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு ஆட்டோமேஷன், மின்னணுவியல் தொழிற்நுட்ப வல்லுநர், குழாய் செப்பணிடுபவர் ஆகிய தொழிற் பயிற்சிகளுக்கு 10 மற்றும் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நாளை (டிசம்பர் 23) கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட எஸ்.பி. ராஜாராம் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். இதில் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
வேப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆண்டிற்கான தொழிற் பயிற்சியாளர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு ஆட்டோமேஷன், மின்னணுவியல் தொழிற்நுட்ப வல்லுநர், குழாய் செப்பணிடுபவர் ஆகிய தொழிற் பயிற்சிகளுக்கு 10 மற்றும் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திட்டக்குடி வட்டம், நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் செல்லமுத்து என்பவர் திருச்சி மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விருதாச்சலம் இருப்புப் பாதை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வகுப்பு, மாணாக்கர்களின் உடல்நலன் குறித்து அறிந்து பயிற்றுவித்தல், குடும்ப சூழ்நிலையறிந்து பயில்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருதல் வேண்டும். மாணவர்கள் தன்முனைப்புடன் கல்வி பயில ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரி மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் இளம் பெண் புவனேஸ்வரி என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி அவினேஷ், அவந்தா என இரு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வேலு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கம் வழங்கினார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.ஐ. கதிரவன் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு நேற்று டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவின் அளவு 1155.61 மி.மீ ஆகும். ஆனால் தற்போது 2024 ஆம் ஆண்டு மழைப்பொழிவின் அளவு சாதாரணமாக 1206.7 மி.மீ நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சராசரியை தாண்டி இதுவரை 1460.6 மி.மீ அளவு மழை பெய்துள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் களஞ்சியம் 2.0 செயலி மூலம் சம்பள பட்டியல், கடந்த கால சம்பள விபரங்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், பண்டிகை முன்பணம், பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் உள்ளவற்றை தாங்களே சரிபார்த்து கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.