India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.26) காலை 8.30 மணி நிலவரப்படி, சேத்தியாத்தோப்பு 168.4 மில்லி மீட்டர், புவனகிரி 75 மில்லி மீட்டர், விருத்தாசலம் 65 மில்லி மீட்டர், சிதம்பரம் 53.8 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 50 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 47 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 31.8 மில்லி மீட்டர், வடக்குத்து 21 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கடலூர் இளைஞர்களே, டிகிரி முடித்தால் போதும் உங்களாலும் Bank வேலைக்கு போக முடியும். ஆம், மத்திய பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் வரும் 06.10.2025-க்குள் <

ஆவினங்குடி போலீசார் நேற்று வையங்குடி கிராம பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக மினி டெம்போவில் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த செவ்வேரி கிராமத்தை சேர்ந்த ராகுல் (21), அரியலூர் மாவட்டம் குழும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (28) ஆகியோரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூரில் அண்ணா விரைவு சைக்கிள் போட்டி 27.9.2025 அன்று காலை 7 மணிக்கும், அண்ணா மாரத்தான் போட்டி 28.9.2025 அன்றும் நடக்கிறது. இந்த 2 போட்டிகளும் கடலூர் அக்ஷரா வித்யாசரம் பள்ளியில் இருந்து புறப்பட்டு கஸ்டம்ஸ் ரோடு- மருதாடு வழியாக வெள்ளப்பாக்கம் வரை சென்று திரும்பி வர வேண்டும். இதில் பங்கேற்பவர்கள் போட்டி நடக்கும் அன்று காலை 6 மணிக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மக்களே, உங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு (Solar Panel) பொருத்துவதன் மூலம் மாதம் ரூ.2,000-3,000 வரை மின்கட்டணத்தை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <

கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் போலீசார் நேற்று குறவன்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சிவகுரு (24), சோழத்தரத்தை சேர்ந்த ஜான் சுதர்சன் (21), மேல் பாதியை சேர்ந்த குணால் பாண்டி (23), ராஜசேகரன் (29), வடலூரை சேர்ந்த ஹரிஷ் (25) மற்றும் 15 வயது சிறுவன் உட்பட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (73). இவர் சிலம்பி மங்கலம் அருகே வயலில் வேலையை முடித்துவிட்டு, வெளியேறும் போது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் நாகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்து புதுச்சத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாராணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (செப்.26ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.25) இரவு 10 மணி முதல் இன்று (செப்.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நாளை (செப்.26) கலெக்டர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடக்கிறது. இதில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.