Cuddalore

News January 10, 2025

கடலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. 15 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த முகாமில் 10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்வோர் தங்கள் கல்வி சான்றுகள், அடையாள அட்டைகளுடன் வருமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். SHARE IT.

News January 9, 2025

கடலூரில் 11-ம் தேதி பொது விநியோகத் திட்ட முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 11.1.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 9, 2025

“ஸ்க்ரப் டைபஸ்” நோயால் கடலூரில் 594 பேர் பாதிப்பு

image

“ஸ்க்ரப் டைபஸ்” என்ற உன்னி காய்ச்சல் நோயால் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில், 594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உன்னி பூச்சிகள் புதர் மண்டிய பகுதி மற்றும் அதிகமான செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளில் காணப்படும். விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதியில் அருகே வசிப்போர், மலை ஏற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணி பெண்கள் இந்த பூச்சி கடிக்கு ஆளாகின்றனர்.

News January 9, 2025

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவிலிருந்து மதுவிலக்கு வழக்குகளில் 4 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வரும் 23ஆம் தேதி கடலூர் ஆயுதப்படை வளாக எஸ்.ஆர்.ஜே திருமண மண்டபத்தில் ஏலம் விடப்படுகின்றன. விவரங்களை நேரில் அறியலாம் என கடலூர் எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News January 9, 2025

ஆட்சியரின் இன்றைய நிகழ்ச்சி நிரல் விவரம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று  காலை 9 மணிக்கு கடலூர் டவுன்ஹாலில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்க உள்ளார். பின்னர் காலை 9.30 மணிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை புதுப்பாளையத்தில் வழங்கி துவக்கி வைக்க உள்ளார். மாலை 4 மணிக்கு கடலூர், நத்தப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்து வைக்க உள்ளார். 

News January 9, 2025

தவாக நிர்வாகி கொலை வழக்கில் 2 பேர் கைது

image

கடலூர் முதுநகர் சான்றோர்பாளையம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சங்கர் (34) கடந்த 1ஆம் தேதி இரவு சுத்துக்குளம் பகுதியில் மர்மநபர்கள் இருவரால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ் (33), அன்பு (33) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 8, 2025

குடியரசு தினம்: சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்- ஆட்சியர்

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, விழா நடக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை ஜன.26 அன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கடலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 8, 2025

கடலூர் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய ஆமை

image

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடந்த சில நாட்களாக அரியவகை ஆமைகள் முட்டையிடுவதற்காக ஏராளமாக கடற்கரைக்கு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் ஒரு ஆமை இறந்து கரை ஒதுங்கியது. இதை கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் அந்த ஆமையை கைப்பற்றி அதனை கடற்கரையில் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 8, 2025

காட்டுமன்னார்கோயில் அருகே லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த மணியம்ஆடூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக்(64) என்பவர் நேற்று மாலை மேல தெருவில் வீட்டின் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக முதியவர் மாலிக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலின் பெயரில் போலீசார் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2025

கடலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு 8 நாள் விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கலையொட்டி அரசு விடுமுறையாக வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து 18, 19 முறையே சனி, ஞாயிறு என்பதால் கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பொங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

error: Content is protected !!