Cuddalore

News January 11, 2025

2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்க தடை – ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசு தினம் (26.01.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபானக் கடைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கூடங்கள்இயங்க தடை விதிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

ரத்தப்பட்டு ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

image

கடலூர் மாவட்டம், ரத்தப்பட்டு ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு இன்று (ஜன.11) ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன் தலைமையில், 100 நாள் வேலை பணியாளர்கள் அனைவரும் ஓரே சீருடையில் சமத்துவப் பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிகழ்வில் பணித்தள பொறுப்பாளர் கௌசல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News January 11, 2025

கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை வெளியிட்ட ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். உடன் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர் ராவ், ஆர்பிஐ உதவி தலைமை மேலாளர் ஸ்ரீதர், நபார்டு உதவி தலைமை மேலாளர் சித்தார்த்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (எல்டிஎம்) அசோக்ராஜா உட்பட பலர் உள்ளனர்.

News January 11, 2025

வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படாமலுள்ள 1078 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் அரசு வழிகாட்டுதலின்படி உரிய முறையில் விண்ணப்பித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்கு தொகையை செலுத்தி குடியிருப்பினை பெற்று பயடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 11, 2025

சிதம்பரம் கோவில் பாதுகாப்பு குறித்து ஆட்சியர், எஸ் பி க்கு கடிதம்

image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, பக்தர்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதர்களின் பாரம்பரியமான வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் கடிதம் அனுப்பியுள்ளார்.

News January 10, 2025

235 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்: ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்திட காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 34 இடங்களிலும், ஸ்ரீமுஷ்ணம் 42, விருத்தாசலம் 32, சிதம்பரம் 25, திட்டக்குடி 33, புவனகிரி 24, குறிஞ்சிப்பாடி 9, வேப்பூர் 12, கடலூர் 15, பண்ருட்டியில் 9 இடங்களிலும் என மொத்தம் 235 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 10, 2025

கடலூர்: நாளை பள்ளிகள் இயங்கும்

image

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பருவமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் பணி நாளாக நாளை (11.01.2025) சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் நாளை (11.01.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டும் என கடலூர் முதன்மைக் கல்லி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

நேரடி கொள்முதல் தொடர்புக்கு தொலைபேசி எண் அறிவிப்பு

image

நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக 04142-220700 என்ற எண்ணிற்கு விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News January 10, 2025

சிதம்பரம் நந்தனார் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு

image

கடலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் நந்தனார் அரசு ஆதிதிராவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கலெக்டர் நேற்று பாராட்டு தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துடன் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் அறிவுத்திறன், சுகாதாரம் உள்ளிட்டவைகளில் அடிப்படையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளியாக சிதம்பரம் நந்தனார் அரசு திராவிடர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

News January 10, 2025

கடலூர்: நாம் தமிழர் கட்சி தலைவர் விலகல்

image

கடலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன விடுதலை அரசியல் என்று இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன். இன்றோடு நாதகவில் இருந்து விலகுகிறேன். இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!