Cuddalore

News February 22, 2025

கடலூர்: இன்று ரேஷன் கடை இயங்காது

image

கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலைநாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (பிப்.22) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் – கடலூரில் முதல்வர் ஆக்ரோஷம்!

image

கடலூரில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் “தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்.
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் இந்த
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை இந்த மண்ணுக்குள் வரமுடியாது” என்று ஆக்ரோஷமாக பேசினார்.

News February 21, 2025

பண்ருட்டியில் ரூ.15 கோடியில் அரசு கல்லூரி – முதல்வர் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு இன்று மாலை வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு‌ முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கோரிக்கையை ஏற்று, கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

News February 21, 2025

கடலூர் வருகை தந்த தமிழக முதல்வர்!

image

கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை கடலூருக்கு வருகை தந்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். உடன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News February 21, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் வருகை!

image

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு 2 நாள் (பிப்.21, பிப்.22) சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார். கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் பங்கேற்று, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க உள்ளாா்.

News February 20, 2025

கடலூர்: நாளை முதலமைச்சர் சுற்றுப்பயண விபரம்

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 9.30 மணியளவில் புதுச்சேரி புறப்பட்டு, மதியம் 12.30 மணியளவில் புதுச்சேரி வந்தடைவார், மாலை 4.30 மணிக்கு கடலூர் புறப்பட்டு, மாலை 5.15 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாலை 6.30 மணியளவில் நெய்வேலி புறப்பட்டு, இரவு 7.30 மணியளவில் நெய்வேலி விருந்தினர் மாளிகை வருகை தர உள்ளார்.

News February 20, 2025

விருத்தாசலம் தனி மாவட்டம்: வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்?

image

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டம், திருப்பெயரில் நடைபெற உள்ள ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், மாநாட்டில் விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.

News February 20, 2025

குழந்தைகள் நலக்குழு தலைவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

image

கடலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். 35 முதல் 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் அல்லது <>லிங்க்<<>> ல் பெற்று கொள்ளலாம். தகுதியுள்ளவர்கள் வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என கடலூர் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News February 19, 2025

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் ஸ்ரீமுஷ்ணம் கோயில்

image

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அமைந்துள்ள பூவராக சுவாமி கோயிலின் நுழைவாயிலில் ஏழு-அடுக்கு ராஜகோபுரம் உள்ளது. வருடத்தில் ஏப்ரல் – மே மாதங்களில் 3 திருவிழாக்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாக்கள் அப்பகுதியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது. இரதத்தின் கொடியை முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர். நீங்கள் இந்த கோயிலுக்கு சென்றுள்ளீர்களா? கமெண்ட் பண்ணுங்க.SHARE NOW. 

News February 19, 2025

சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

image

ஸ்ரீமுஷ்ணம் மேல் புளியங்குடியை சேர்ந்தவர் ஆனந்த் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுவன் மறுத்த நிலையில், 3.10.2023 அன்று மாணவனை ஆனந்த் கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாணவன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். விசாரணையில் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!