Cuddalore

News October 4, 2025

கடலூர்: சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

image

சென்னையில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் கடலூரை சேர்ந்த மாணவர் திவாகர் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதன் மூலம் 20.11.2025 அன்று வாரணாசியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர் திவாகரை நேற்று கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் பாராட்டினார்.

News October 4, 2025

கடலூரில் ரத்ததானம் அளித்த எஸ்.பி.

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கடலூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதற்கு எஸ்.பி. ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்ததுடன், அவரும் ரத்ததானம் செய்தார். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் அப்பாண்டைராஜ், மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன், மாவட்ட குருதி பரிமாற்ற குழு அலுவலர் ஸ்ரீதரன், மற்றும் மருத்துவ குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

News October 4, 2025

கடலூர்: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> www.cybercrime.gov.in <<>>என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 4, 2025

கடலூர் மாவட்டத்தில் 984 மாணவர்கள் சேர்க்கை

image

கடலூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், விஜயதசமியை முன்னிட்டு மழலையர் முதல் 8 ஆம் வகுப்பு வரை, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 38 பேரும், கடலூர் கல்வி மாவட்டத்தில் 48 பேரும் என மொத்தம் 86 மாணவ, மாணவிகள் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர். அதுபோல தனியார் பள்ளிகளில் 898 மாணவர்கள் என கடலூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 984 மாணவ செல்வங்கள் தங்களது கல்வி பயணத்தை தொடங்கியுள்ளனர்.

News October 4, 2025

கடலூர்: BE போதும், இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் 171 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 171
3. சம்பளம்: ரூ.64,000 – ரூ120000
4. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. கடைசி தேதி: 13.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 4, 2025

கடலூர்: பெண்ணின் தாலி சங்கிலி பறிப்பு

image

திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மனைவி பூங்கொடி (30). இவர் தனது தாய் வீடான கள்ளக்குறிச்சி சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ்சில் ஏறி திட்டக்குடி வந்தார். அப்போது, தான் அணிந்திருந்த 9 சவரன் தாலி செயின் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து தாலி செயின் பறித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 4, 2025

கடலூர் அருகே இளம்பெண் தற்கொலை

image

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (22). சென்னையில் நர்ஸாக பணிபுரிந்த இவர் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புவனேஸ்வரி தற்கொலைக்கு திருவட்டத்துறை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் காரணம் என்றும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் புவனேஸ்வரி உறவினர்கள் பெண்ணாடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

News October 4, 2025

கடலூர்: 42 கம்பெனிகள் மீது அதிரடி நடவடிக்கை

image

கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று, 42 நிறுவனங்களில் பணியாளர்களுக்கு விடுப்போ அல்லது இரட்டிப்பு சம்பளமோ வழங்காமல் வேலை பார்க்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 42 நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது.

News October 4, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(அக்.3) இரவு 10 மணி முதல் இன்று (அக்.4) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News October 3, 2025

சிதம்பரம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

image

கடலூர் மாவட்டம் சிதம்பரம் டி.எஸ்.பி.யாக இருந்த லாமேக் மீது லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்ததால், அவர் வேலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சிதம்பரம் உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.யாக பிரதீப் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய டி.எஸ்.பி. பிரதீப் இன்று சிதம்பரத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!