Cuddalore

News January 31, 2025

கடலூர்: ஒரே ஆண்டில் 145 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு

image

கடலூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஜனவரி (2024) மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வருவோரை கணக்கெடுப்பு நடத்தியதில் புதிதாக 145 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது என கடலூர் மருத்துவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

கடலூர்: பணி நிறைவு பாராட்டு விழாவில் ஆட்சியர் பங்கேற்பு

image

கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் இன்று (31/01/2025) பணி நிறைவு பெறுகிறார். இதனை முன்னிட்டு, இன்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி ஜவகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, கடலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

News January 31, 2025

வடலூர்; 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் 11.2.2025 அன்று நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் சேலம், சென்னை ஆகிய வெளிமாவட்டங்களில் இருந்தும், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயக்கப்படுகிறது.

News January 30, 2025

கடலூர்: விவசாயிகளை வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட் அறிவிப்பு

image

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலையடிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு எனக்கூறி விவசாய நிலங்களில் உள்ள விவசாயிகளை வெளியேற்றக் கூடாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கு பட்டியலிட்டு விசாரிக்கப்படும் வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News January 30, 2025

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான கூட்டம் நாளை (31.1.2025) புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். அதனால் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News January 30, 2025

கடலூர் பெயர் கரணம் உங்களுக்கு தெரியுமா?

image

கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து 1993 செப்டம்பர் 30 அன்று பிரிக்கப்பட்டது. முற்காலத்தில் கடலூரை கூடலூர் என்றே அழைத்துள்ளனர். பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலப்பதால் காலப்போக்கில் இப்பெயர் மருகி கடலூர் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்திலும் இது கடலூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News January 30, 2025

விருத்தாசலம்: ரயிலில் 1,462 டன் யூரியா வருகை

image

விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 1,462 டன் யூரியா உர மூட்டைகள் வந்திறங்கின. சென்னை மணலியில் உள்ள விஜய் யூரியா நிறுவனத்தில் இருந்து 1,462 டன் உர மூட்டைகள், 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று காலை வந்தன. இவற்றை கடலுார், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

News January 29, 2025

கடலூர்: தேவையான இடங்களில் கேமரா அமைக்க எஸ்.பி அதிரடி உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் தேவையான இடங்களில் குற்றங்களை கண்டறிய மிகவும் உறுதுணையாக இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது மாவட்டத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எத்தனை செயல்பாட்டில் உள்ளன, பழுதடைந்த கேமராக்களை உடனடியாக பழுது நீக்கம் செய்யவும் தேவையான இடங்களில் புதிதாக கேமராக்களை பொருத்தவும் முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

News January 29, 2025

கடலூர்: அங்கன்வாடி மையங்கள் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்

image

கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு இணையுனவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 10,223 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 9,405 பாலூட்டும் தாய்மார்களுக்கு இணையுனவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு வருடத்திற்கு வண்ண சீருடைகளும் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 29, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவ பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திட“முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்புபவர்கள் htps://ex-servicemen-welfare.pixous.info என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!