India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரைச் சேர்ந்தவர் ரூபா. இவர் இந்திய கடற்படையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சக கடற்படை பெண் அதிகாரியுடன் இணைந்து, இருவரும் பாய்மர படகில் உலகை சுற்றி வருகின்றனர். இதுவரை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என 21,600 நாட்டிக்கல் மைல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 28.2.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உங்களது நண்பர்களுக்கு இதனை பகிரவும்..
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 08.02.2025 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன் (35). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் மரத்திலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்த மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கிராமங்கள், குக்கிராமங்களுக்கு பேருந்து சேவையை வழங்கும் நோக்கில் பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மினி பேருந்து இயக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பான வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட பாஜக சார்பில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்து சிதம்பரம் பேருந்து நிலையம், குமாராட்சி கடைவீதி, வேப்பூர் கூட்டுரோடு ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 51 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
கடலுார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ. 5.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கடலூர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, மனுக்கள் பெற்றார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளது புவணாம்பிகை உடனுறை பூலோகநாதர் திருக்கோயில். இக்கோயிலில் வழிபடுவதால் பதினாறு விதமான தோஷங்களை நீங்கும். மேலும் வீடு மனை வாங்க பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷ தினங்களிலும் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இத்திருக்கோயில் நெல்லிக்குப்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைந்துள்ளது.
கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறை தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று செல்லங்குப்பத்தில் உள்ள கைத்தறி துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, நடைமுறையில் உள்ள நேரடியாக கூலி வழங்கும் முறையை செயல்படுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
Sorry, no posts matched your criteria.