India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் பாரதி சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் வாசலில் இன்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த வாலிபரின் உடலை கடலூர் புதுநகர் போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் விரைவில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெறும். இந்த புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 100 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 3,149 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் 2,583 பண மோசடி புகார்கள் மற்றும் 569 பணமில்லாத மெயில் ஐடி திருட்டு, மொபைல் போன் ஹேக் செய்வது உள்ளிட்ட புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று (22.01.2025) கடலூர் அண்ணா சந்தை, கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெள்ளி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் செம்மண்டலம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு கட்டப்பட்டு வரும் விடுதி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.23) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா தலைமையில், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பெல்ட் வகை அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 எனவும், டயர் வகை எந்திரங்களுக்கு ரூ.1,800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது அப்பகுதி வேளாண் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் கல்வியாண்டில் விடுதி மாணாக்கர்களுக்கு வாரத்தின் 5 நாட்களிலும் மாலை நேரங்களில் Social Lab மூலம் கலை, அறிவியல், ஆங்கில பயிற்சி (Spoken English) உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, விழா நடக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை ஜன.26 அன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கடலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 5.2.2025 முதல் 15.2.2025 வரை இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் www.joinindianarmy.nic என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான ஆவணங்கள் இன்றி வந்தால் பேரணியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.