Cuddalore

News March 16, 2025

சிதம்பரம்: பைக் மீது கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

குறிஞ்சிப்பாடி மேல கொளக்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(32). இவர் இன்று சிதம்பரம் அடுத்த வேலக்குடி பைபாஸ் மேம்பாலத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2025

கடலூரில் 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

image

கடலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 19ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

News March 16, 2025

கடலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 16, 2025

கடலூரில் இப்படி ஒரு இடமா?

image

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மாங்க்ரோவ் காடுகள் எனும் சதுப்பு நில காடுகள் 1350 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் 2ஆவது சதுப்பு நிலக் காடுகள் என்ற பெருமைக்கும் உரியதாகும். வனத்துறை சார்பில் படகுகளும் இங்கு இயக்கப்படுகின்றன. ஒருமுறை இங்கு சென்று விசிட் அடியுங்கள்..அந்த அனுபவமே அலாதியானது. இயற்கை விரும்பிகளுக்கு SHARE பண்ணுங்க..

News March 15, 2025

கடலூர்: இன்று ரோந்து பணி செல்லும் போலீசாரின் விபரங்கள் 

image

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு இந்த போலீசாரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா வரும் 22ஆம் தேதி துவங்குகிறது. இதில் பாரம்பரிய உணவு கூடங்கள், 360 சுய வீடியோ கூடம், கோளரங்கம், 3D அரங்கம், V.R அரங்கம், COMICS அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதி இலவசம் என்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவும் என்றும் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 15, 2025

சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொற்கூரையின் சிறப்பு தெரியுமா?

image

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேலே இருக்கும் பொற்கூரையின் சிறப்பு என்ன தெரியுமா? கூரையின் மேலே 21,600 தங்கக் தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலின் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 15, 2025

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் (Research Fellow) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் 15-03-2025. தகுதியான நபர்களுக்கு Rs.25,000 வரை சம்பளம் கிடைக்கும். முழு விவரங்கள் <>லிங்க்<<>> இந்தப் இணையதத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW

News March 14, 2025

போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டி மற்றும் வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (14.03.2025) பரிசுகளை வழங்கினார். அப்போது பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் போட்டியில் பங்கு பெற்றவர்கள் உடன் இருந்தனர்.

News March 14, 2025

கடலூரில் ‘கலைஞர் நூலகம்’: பட்ஜெட்டில் அறிவிப்பு!

image

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக “சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் எனவும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடம் வசதிகளுடன் கட்டப்படும்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

error: Content is protected !!