India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில் சிதம்பரம் புவனகிரி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்ற டாக்டர் மீது மோதியதில் டிராக்டர் மற்றும் லோடு டிப்பர் தனித்தனியே கழண்டு சாலையில் இரு புறங்களிலும் சிதறி பெரும் விபத்து டிராக்டரில் பயணித்த ஐந்து வயது பெண் குழந்தை உயிர் இழப்பு மேலும் பேருந்தில் பயணித்த பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் மாவட்டம் குற்ற ஆவண காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளராக சார்லஸ் இன்று பொறுப்பேற்று கொண்டார். கடலூர் மாவட்டம் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளராக அப்பண்டைராஜ் பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு கடலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் இன்று (10.02.2025) பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் அனு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், தலைமையாசிரியர் இந்திரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தைப்பூசத்தை முன்னிட்டு 11,12,13 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06147/48 விழுப்புரம் – விருத்தாசலம் -வடலூர் கடலூர் துறைமுகம் சந்திப்பு- வடலூர் -விருத்தாச்சலம் -விழுப்புரம் MEMU. 06133/32 விருத்தாச்சலம் – வடலூர் -கடலூர் துறைமுகம் சந்திப்பு – வடலூர் – விருத்தாச்சலம் MEMU. 8 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட MEMU சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் புகார்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் கடலூர் மாவட்டம், வடலூர் போலீசார் தரப்பில், சீமானுக்கு சம்மன் வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
வள்ளலார் நினைவு நாள் மற்றும் தைப்பூச ஜோதி தரிசன திருவிழா நாளை (பிப்.11) நடைபெற உள்ளது. இந்நிலையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறும் அன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும், மீறி மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் வடலூரில் சத்திய ஞான சபை மூலம் சன்மார்க்க கொள்கைகளை விதைத்த வள்ளலார் எனும் ராமலிங்க அடிகள் நினைவு தினம், நாளை மறுநாள் 11ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு சார்பில் வெளியான அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு, கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு உள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 1500 ற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என வடலூரில் விழுப்புரம் சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே புயல் கடலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. இதையடுத்து கிராம மக்களுக்கு அரசு புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது பூங்குணம் வி.ஏ.ஓ-வாக பணிபுரிந்த சம்பத் (56) என்பவர் நிவாரண நிதியில் ரூ.4 லட்சம் முறைகேடு செய்தார். இதுகுறித்த வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பத்துக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Sorry, no posts matched your criteria.