India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 8 ஆயிரத்து 787 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 1,885 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3 ஆயிரத்து 624 மெட்ரிக் டன்னும், காம்பளக்ஸ் உரம் 4 ஆயிரத்து 607 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,014 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 19 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் இன்று (31.01.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கோமதி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன் உட்பட பலர் உள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்த வட்டம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு இருந்து வருவதை அகற்றக் கோரி சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஜனவரி (2024) மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வருவோரை கணக்கெடுப்பு நடத்தியதில் புதிதாக 145 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது என கடலூர் மருத்துவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் இன்று (31/01/2025) பணி நிறைவு பெறுகிறார். இதனை முன்னிட்டு, இன்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி ஜவகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, கடலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் 11.2.2025 அன்று நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் சேலம், சென்னை ஆகிய வெளிமாவட்டங்களில் இருந்தும், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயக்கப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலையடிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு எனக்கூறி விவசாய நிலங்களில் உள்ள விவசாயிகளை வெளியேற்றக் கூடாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கு பட்டியலிட்டு விசாரிக்கப்படும் வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான கூட்டம் நாளை (31.1.2025) புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். அதனால் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து 1993 செப்டம்பர் 30 அன்று பிரிக்கப்பட்டது. முற்காலத்தில் கடலூரை கூடலூர் என்றே அழைத்துள்ளனர். பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலப்பதால் காலப்போக்கில் இப்பெயர் மருகி கடலூர் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்திலும் இது கடலூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 1,462 டன் யூரியா உர மூட்டைகள் வந்திறங்கின. சென்னை மணலியில் உள்ள விஜய் யூரியா நிறுவனத்தில் இருந்து 1,462 டன் உர மூட்டைகள், 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று காலை வந்தன. இவற்றை கடலுார், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.