Cuddalore

News February 4, 2025

குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

கடலுார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ. 5.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கடலூர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, மனுக்கள் பெற்றார்.

News February 4, 2025

சகலதோஷங்களை நீக்கும் நெல்லிக்குப்பம் பூலோகநாதர்

image

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளது புவணாம்பிகை உடனுறை பூலோகநாதர் திருக்கோயில். இக்கோயிலில் வழிபடுவதால் பதினாறு விதமான தோஷங்களை நீங்கும். மேலும் வீடு மனை வாங்க பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷ தினங்களிலும் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இத்திருக்கோயில் நெல்லிக்குப்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைந்துள்ளது.

News February 4, 2025

கடலூர்: கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறை தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று செல்லங்குப்பத்தில் உள்ள கைத்தறி துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, நடைமுறையில் உள்ள நேரடியாக கூலி வழங்கும் முறையை செயல்படுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.

News February 2, 2025

சேத்தியாத்தோப்பு: பாலத்தில் மது அருந்தியவர் தவறி விழுந்து பலி

image

சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியை சேர்ந்தவர் வனத்தையன் மகன் பரிசுத்தராஜா. இவர் நேற்று முன்தினம் மாலை அகரபுத்துார் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிசுத்தராஜா உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோழதரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2025

கடலூர்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

image

கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (33), அன்பு (33) ஆகியோரை முதுநகா் போலீஸாா் கடந்த ஜன.1-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் இருவரையும் ஒராண்டு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

News February 1, 2025

திருவந்திபுரத்தில் நாளை 1000 போலீசார் பாதுகாப்பு

image

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை அவர்கள் தலைமையில், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 71 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1000 காவல்துறையினர் நாளை பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.

News February 1, 2025

கடலூர்: இன்று பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும்! 

image

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, அலுவலகங்களுக்கும். 13.01.2025 அளிக்கப்பட்ட ஆருத்ரா தரிசன உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக இன்று 01.02.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களும் நாளை (01.02.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

News January 31, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.,31) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பொன்மகரம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சங்கர், பண்ருட்டி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2025

கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவிப்பு

image

தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஜி.கோகுல் என்பவரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நியமனம் செய்தார். இந்த நிலையில் த.வெ.க கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட கோகுலுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 31, 2025

கடலூர்: நாளை பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும்! 

image

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, அலுவலகங்களுக்கும். 13.01.2025 அளிக்கப்பட்ட ஆருத்ரா தரிசன உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக நாளை 01.02.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களும் நாளை (01.02.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!