Cuddalore

News October 12, 2025

கடலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News October 12, 2025

கடலூர்: மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

image

ஒரத்தூர் அடுத்த சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி சேகர்(60). இவருக்கும், இவரது மனைவி சுசிலா தேவிக்கும்(50), இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த சேகர் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 12, 2025

கடலூர்: வடமாநில இளைஞர் பரிதாப பலி

image

புவனகிரி அருகே பு.உடையூர் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி மங்கள் பௌரி என்பவர், வயலில் நாட்டு நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மங்கள் பௌரியை எதிர்ப்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து புவனகிரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News October 12, 2025

கடலூர்: போலீஸ் என கூறி திருட்டு!

image

விருத்தாசலம் அடுத்த காப்பான்குளத்தை சேர்ந்தவர் சிவராமன் (44). இவர் கடந்த மாதம் பெரியகங்கணாங்குப்பத்தில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவரிடம் தான் ஒரு போலீஸ் என கூறி, அவர்கள் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் சிவராமனை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடவே தடுக்கி விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

News October 12, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.11) இரவு 10 மணி முதல் இன்று (அக்.12) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 11, 2025

கடலூர் அருகே லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

image

திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (67). இவர் நேற்று காலை வெண்கரும்பூர் சொசைட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 11, 2025

கடலூர்: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு<> இங்கே க்ளிக் <<>>செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 11, 2025

35% மானியம்: கடலூர் கலெக்டர் அறிவிப்பு

image

கடலூரில் விலைப் பொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் அலகுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், பொது பிரிவினருக்கு 25 % மானியமும், மற்ற பிரிவினர்களுக்கு கூடுதலாக 10% மானியமும் வழகப்படும். வேளாண் தொழில் முனைவோர்கள் வேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் 9659299219 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

News October 11, 2025

கடலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 11, 2025

கடலூர் அருகே தொழிலாளி பரிதாப பலி

image

பெண்ணாடம் அடுத்த தொளாரை சேர்ந்தவர் தொழிலாளி ஆனந்த செல்வம் (43). இவர் இன்று தனது பைக்கில் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பகுதியில் சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த ஆனந்த செல்வம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!