Cuddalore

News March 29, 2024

கடலூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

image

கடலூர் கம்மியம்பேட்டை பழைய குப்பை கிடங்கு அருகே உள்ள கெடிலம் ஆற்றில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் இன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News March 29, 2024

கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

image

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News March 29, 2024

கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு

image

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம் திருச்சபையில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

News March 29, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பஸ் பயண சலுகையின் செல்லத்தக்க காலம் 31.3.2024 ஆகும். இந்நிலையில் சலுகை காலம் முடிவடைய உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும் 2023-24-ல் வழங்கப்பட்ட அதே பஸ் பயண அட்டையை 30.6.2024 வரை மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களுக்கு அழைப்பு

image

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வருகிற (ஏப்ரல்) 2-ந் தேதி காலை 6.30 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் 12 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக்கு ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

பஸ் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து பஸ்களிலும் ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்றப்படுவது ஆய்வின் போது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

மைசூர்-கடலூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில்

image

மைசூா் – சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர் , ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 28, 2024

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

image

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன்பு வரக்கூடிய வியாழக்கிழமை கிறிஸ்தவர்களால் கட்டளை வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கட்டளை வியாழக்கிழமையான இன்று விருத்தாசலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

குள்ளஞ்சாவடியில் நாளை பாமக நிறுவனர் பிரச்சாரம்

image

கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் பாமக சார்பில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில், தங்கர் பச்சானை ஆதரித்து நாளை 29ஆம் தேதி குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அண்ணாபாலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News March 28, 2024

விசிக தலைவர் திருமாவளவன் வேட்பு மனு ஏற்பு

image

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார் இந்நிலையில் நேற்று அமைச்சர்களுடன் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் இன்று மனு மீதான பரிசீலனை நடைபெற்றது இதில் திருமாவளவன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

error: Content is protected !!