Cuddalore

News March 30, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

கடலூர் கோவிலில் வரும் 23-ம் தேதி சத்திய நாராயண பூஜை

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சீரடி ஸ்ரீ சர்வசக்தி சாய்பாபா ஆலயத்தில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மதியம் 3 மணியளவில் சத்திய நாராயண பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைகளில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News March 30, 2024

கடலூரில் காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு

image

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் இன்று காய்கறிகள் மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கலெக்டர் அருண்தம்புராஜ், கோட்டாட்சியர் அபிநயா, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டனர்.

News March 30, 2024

கடலூர்: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இன்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் , மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

News March 30, 2024

சிதம்பரத்தில் விசிகாவுக்கு பானை சின்னம்

image

திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளான சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவர்களுக்கு தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா பானை சின்னம் இன்று ஒதுக்கீடு செய்தார்.

News March 30, 2024

கடலூரில் அண்ணாமலை தீவிர பிரச்சாரம்

image

கடலூர் முதுநகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது அவர் கூறியதாவது மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார் அதுமட்டுமின்றி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் மிகவும் எளிமையான மனிதர் அதனால் இவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறினார்.

News March 30, 2024

கடலூரில் அதிமுக கூட்டணி கட்சி கொடி கம்பங்கள் அகற்றம் 

image

கடலூருக்கு இன்று மாலை அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி வருவதை அடுத்து கடலூர் அண்ணா மேம்பாலம் தொடங்கி மைதானம் வரை அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.இதற்கு முறையான அனுமதி வாங்கவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கடலூர் பகுதியில் இருந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி கொடி கம்பங்கள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

News March 30, 2024

சிதம்பரம்: பிஜேபி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்

image

இன்று சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த தடா பெரியசாமி, தற்போது சிதம்பரம் தொகுதிக்கு சீட் கேட்டு கொடுக்காததால் அதிமுகவில் இணைந்தார் என கூறப்படுகிறது.பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்தார் தடா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2024

கடலூர்:தேர்வெழுதிய கைதிகள் 

image

கடலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது. இங்கு 40 சிறைவாசிகள் கற்போராக பயின்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 40 சிறைவாசிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து சிறைவாசிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

News March 30, 2024

கடலூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு,அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக இன்று மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

error: Content is protected !!