India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க.வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கட்சியினர் ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் மாம்பழ சின்னத்திற்கு ஆதரவு கேட்டு விளம்பரம் வரைந்திருந்தனர் . இந்த சுவரை நேற்று மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடலூரில் வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியின்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாதிற்கு ஆதரவாக திமுக சார்பில் கடலூரில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின்
மாநில நிர்வாககுழு உறுப்பினர் மற்றும்
மாநகர அமைப்பு குழு தலைவர் தி. கண்ணன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் பிரிவினர் திரளாக கலந்து கொண்டனர்.
கடலூர் முதுநகரில் எந்தவொரு தெரு பகுதிகளுக்கு சென்றாலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தங்கள் வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குபதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் விசிக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விசிக கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் மேலிட பொறுப்பாளர் தாமரைச்செல்வனை அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதையடுத்து தாமரைச்செல்வன், வேட்பாளர் விஷ்ணு பிரசாரத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடலூர் தொகுதியில் கடந்த 27ஆம் தேதியுடன் முடிந்த வேட்புமனு தாக்கலில் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 5, சுயேட்சைகள் 11 பேர் என தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் உள்ளனர் என கடலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், தாங்கள் வேட்பு மனுதாக்கல் செய்த நாளிலிருந்து, வாக்குப்பதிவு நாள் வரையிலான தேர்தல் செலவின கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள உள்ள அறிவுரைகளின்படி, குறைந்தபட்சம் மூன்று முறை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர். எம்.கே. விஷ்ணுபிரசாத்திற்கு ஆதரவாக, தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க ஸ்டாலின் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரால் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14 வேட்பாளர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டது. இதனால் சிதம்பரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.