Cuddalore

News March 20, 2024

கடலூர்: பாஜக அலுவலக திறப்பு விழா

image

பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் பாராளுமன்றத் தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று கடலூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 20, 2024

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் விபரம்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அளித்த ஓட்டு சதவீதம் பற்றி விவரம்: குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றாகிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் 7,49,623 பெண் வாக்காளர்கள் 7,61,206 மூன்றாம் பாலினத்தவர்கள் 86 என மொத்த வாக்காளர்கள் 15,10,915 தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்

News March 20, 2024

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி அறிவிப்பு

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி முறையில் பயின்று டிசம்பர் 2023 தேர்வில் எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளமான https:/coe.annamalai university .ac.in /dde-results.php என்ற இணைய வழி முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக அறிவிப்பு எடுத்துள்ளது

News March 20, 2024

சிதம்பரம்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, சிதம்பரம் எம்பி தொகுதியின் வேட்பாளராக சந்திரகாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 20, 2024

கடலூர்:பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியார் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (மார்ச் -19) நடைபெற்றது.
துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

News March 19, 2024

கடலூர்: வாகனங்களில் கட்சி கொடியை அகற்ற அறிவுறுத்தல்

image

நாடாளுமன்ற தேர்தலை (2024) முன்னிட்டு கடலூர் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று மாலை மஞ்சக்குப்பம் பகுதியில் டி.எஸ்.பி பிரபு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கட்சி கொடியுடன் வந்த வாகனங்களை நிறுத்தி கொடிகளை அகற்றுமாறு வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.

News March 19, 2024

கடலூர்: மணிலா வரத்து அதிகரிப்பு

image

கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மணிலா காய் வரத்து 30.04 மூட்டை, மணிலா வரத்து 110.11 மூட்டை, பச்சை பயிறு வரத்து 0.69 மூட்டை மற்றும் நெல் (வெள்ளை பொன்னி) வரத்து 21.48 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு வரவில்லை.

News March 19, 2024

கடலூர் சிறையில் கேமரா உடைப்பு

image

சென்னையை சேர்ந்தவர் ரவுடி தனசேகரன். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிறையில் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது தனசேகர் தனக்கு விருப்பமான படத்தை திரையிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சிசிடிவி கேமராவை உடைத்து வார்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

கடலூர்: சோதனை சாவடி கட்டிடம் திறந்து வைத்த எஸ்.பி

image

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.13 லட்சம் செலவில் புதிதாக சோதனை சாவடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!