India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2-வது கட்ட நீச்சல் வகுப்பு வரும் 16ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.
கடலூர், மஞ்சக்குப்பம், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனையில் காய்ச்சல் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட ‘நிலவேம்பு கஷாயம்’ பொதுமக்களுக்கு இன்று வழங்கப்பட்டது. மேலும் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சமனான இழப்பீடு, வேலை வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் மக்களவைத் தேர்தல் முடிவு வரை கேன்களில் பெட்ரோல் வாங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.குறுகிய நாட்டிலே உள்ள நிலையில் மேலும் கட்சித் தலைவர்களின் தேர்தல் பொதுக்கூட்டம் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பாதுகாப்பு நலன் கருதி பெட்ரோல் பங்குகளில் கேன்களில் வழங்கக்கூடாது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (ஏப்ரல்.5)மாலை முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்திற்கு வருகிறார். கூட்டம் முடிந்ததும் அவர், காரில் கடலூர் வந்து சி.கே.பள்ளியில் இரவில் தங்குகிறார். தொடர்ந்து நாளை(ஏப்ரல்.6) கடலூர் சில்வர் பீச் மற்றும் அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியா கூட்டணி சார்பில் களம் காண்கின்றனர். அவருக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியது. அதற்காக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சிதம்பரத்தில் மிகப்பெரிய “பானை” அனைத்து பகுதிகளும் உலா வந்து கொண்டு இருந்தனர். அதனை பொதுமக்கள் சிறுவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று (04/04/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோவில் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரகாசன் இன்று சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது உடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அதிமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் ராமாபுரம், வழி சோதனை பாளையம், திருமாணிகுழி போன்ற பல்வேறு பகுதியில் பொதுமக்களிடம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போழது பாமக மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். இதில் இளைஞர்கள் வெடி வெடித்து வரவேற்பு கொடுத்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 2,189 பேர் தபாலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.